புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

அரபு மொழி பயிற்சி


அரபு மொழி பயிற்சி
ஆசிரியர் : பி.ஜைனுல் ஆபிதீன்
திருக்குர்ஆனை எளிதில் ஓதுவதற்காக நடத்தப்பட்ட சிறப்பு அரபு மொழி பயிற்சி

குரானைத் தொட்டு முத்தமிடலாமா?


திருமறைக் குர்ஆனைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் பலர் குர்ஆனைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அப்படி முத்தமிடுவதை ஒரு வணக்கமாகக் கூட நினைக்கிறார்கள். குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்ற காரணத்தினால் தான் குர்ஆன் மகத்துவம் அடைகிறது..

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை


மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)


நபி வழி தொழுகை வீடியோ தொழுகை மற்றும் உளு செய்யும் முறை செயல் முறை - கோவை ரஹ்மத்துல்லாஹ் வீடியோ - TNT...

தொழுகை முறை


'நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் - ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 812

FRTJ ஃபிரெஞ்சு


mardi 28 juin 2011

பிரான்ஸ் தௌஹீத் ஜமாஅத் மண்டல செயற்குழு கூட்டம்

பிரான்ஸ் தௌஹீத் ஜமாஅத் மண்டல செயற்குழு கூட்டம் 25.06.11 அன்று மதியம் 3.00 மணிக்கு சகோதரர் துணைசெயலாளர் ருக்னுதீன் வீட்டில் நடைபெற்றது. FRTJ மண்டல நிர்வாகிகள் முன்னிலையில், தலைவர் அதீன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இதில் மண்டல நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முதல் அமர்வின் ஆரம்பத்தில் துணைத்தலைவர் ஹக்கீம் அவர்கள் தொடங்கிவைத்து பேசினார்.இதில் உறுப்பினர்கள் கருத்து கேட்டறியப்பட்டது. பிறகு இரண்டாவது அமர்வில் துணைசெயலாளர் ருக்னுதீன் செயல்பாடுகளைப் பற்றி பேசி ஆலோசனைக்குழு தேர்வை தொடங்கி வைத்தார். ஆலோசனை குழு தேர்வு நடைபெற்றது.பிறகு பொருளாளர் பஜ்ருள் ஹக் மூன்றாவது அமர்வில்தனது கருத்துகளை கூறி தொடங்கி வைத்தார். 

பிறகு TNTJ தலைமையின் நிதிச்சுமையை குறைக்க உதவுவது என்றும், உறுப்பினர் சேர்க்கையை விரிவுபடுத்துவது போன்ற பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இறுதியாக FRTJ சார்பில் tntj வால் வெளியிடப்பட்ட கொள்கை விளக்கம் என்ற புத்தகம் french மொழியில் மொழிமாற்றம் செய்து பிரசுரமாக அனைவருக்கும் கொடுக்கப் பட்டது. இறுதியாக செயலாளர் இன்சாப் தீர்மானத்தை வாசித்தார் .இத்துடன் நிறைவுபெற்றது.

தீர்மானங்கள் 
  • TNTJ தலைமையின் நிதிச்சுமையை குறைக்க உதவுவது,
  • FRTJ வை பிரான்ஸ்- ல் அதிகாரபூர்வமாக பதிவு செய்வது ,
  • உறுப்பினர் சேர்க்கையை விரிவுபடுத்துவது,
  • தொழுகை,பிரார்த்தனைகள் போன்ற அடிப்படை விசயங்களை french-ல் மொழிமாற்றம் செய்து வெளியிடுவது .

மமகவிற்கு மரண அடி கொடுக்க சென்னையில் கூடிய ஆயிரக்கணக்கானோர்

கடந்த 14 ஆண்டுகளாக இயங்கி வந்த உணர்வு வார இதழின் அலுவலகம் மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அவருடைய வகையறாக்களால் ஆக்கிரமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு அது காவல்துறையால் முறியடிக்கப்பட்டது.


உணர்வு பத்திரிகைக்கு சொந்தமான அலுவலகத்தை தங்களின் அரசியல் பலத்தைக் கொண்டு ஆக்கிரமிக்க முயன்ற மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி இன்று (28/06/2011) சென்னை பார்க்டவுன் மொமோரியல் ஹால் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், பொதுமக்களும் திரளாகப் பங்கேற்று மமகவிற்கு எதிராக தங்களின் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாபி கண்டன உரையாற்றினார். மாநிலத் தலைவர் பி.ஜே உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் புகைப்பங்களை காண இங்கே சொடுக்கவும்.
செய்தி  : TNTJ.NET

samedi 25 juin 2011

மனிதனின் சட்டங்களும்,இறைவனின் சட்டங்களும்

இறைவனின் சட்டங்களும்,மனிதனின் சட்டங்களும் என்ற இந்த கட்டுரையின் நோக்கம் இறைவனின் அருட்கொடையான குர்ஆன் கூறும் மகத்தான சட்டங்களின் பயனை புரிந்து கொள்வதும் அவற்றை பயன்படுத்தி மறுமையில் வெற்றி பெருவதுமேயாகும். மனிதனின் சட்டங்கள் காலப்போக்கில் மாறக்கூடியவையும்,முரண்பாடுகள் நிறைந்ததும் ஆகும்.அந்த சட்டங்கள் ஏழைகளுக்கு ஒருவிதமாகவும் வசதிவுள்ளவர்களுக்கு வேறு மாதிரியாகவும் வளைந்து கொடுக்கும் அதி சுயநலங்கள் கலந்திருக்கும்.அரசாங்கம் ஒரு சட்டம் இயற்றும் போது (மெஜாரிட்டி) அதிகமானவர்கள் பயன்பெறும் விதமாகவும்,ஒருசிலர் பாதிக்கப்பட்டால் பிரச்சனையில்லை என்றும் தனி மனித பாதிப்பு பற்றிய அக்கறை அறவே இருக்காது . அரசாங்கத்திற்கு வருவாய் இருக்குமா என பார்ப்பார்கள் உதாரணமாக சிகரெட் மது புகையிலை போன்றவற்றால் மனிதனுக்கு 100% சதவிகிதம் தீங்கு விளைவிப்பவை என தெரிந்திருந்தும் அதை தடை செய்ய போதுமான அதிகாரம் இருந்தும் அரசாங்கத்தின் வருவாய் பாதிக்கும் என்ற காரணத்தினால் அதை தடை செய்யாமல் உடல் நலத்திற்கு தீங்கு ,குடி குடியை கெடுக்கும் என்று கண்ணில் படாதவாறு ஒரு ஓரத்தில் எழுதி வைத்திருப்பார்கள் .

vendredi 24 juin 2011

தாவா பயிற்சி முகாம் வீடியோ 2

தாவா பயிற்சி முகாம் வீடியோ 2
  • வழிகெட்ட கொள்கை 2
  • தாவா பயிற்சி முகாம் வீடியோ 2
  • உரை : பி.ஜைனுல் ஆபிதீன்

    jeudi 23 juin 2011

    தஹஜ்ஜத் தொழுகையை ஆர்வமூட்டலாமே?

    தஹஜ்ஜத் தொழுகையை ஆர்வமூட்டலாமே?
    • தஹஜ்ஜத் தொழுகையை ஆர்வமூட்டலாமே?
    • பதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன்

      mardi 21 juin 2011

      மமக ஆக்கிரமிப்புக்கு மரண அடி!!

      கடந்த 14 ஆண்டுகளாக உணர்வு வார இதழ் எண் : 7, வடமரைக்காயர் தெருவில் செயல்பட்டு வந்தது. 2004ஆம் ஆண்டு உணர்வு அலுவலகத்தில் தமுமுகவினர் வன்முறை வெறியாட்டத்தில் இறங்கிய பின்பும் அது உணர்வு அலுவலகமாகவே இருந்து வந்தது.

      ஆனால், கடந்த மே29அம் தேதி அன்று உணர்வு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த மமகவினர் இது மமக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என்று கூறி அராஜகத்தில் இறங்கினர்.

      நாங்கள் ஆளும்கூட்டணியில் இருக்கின்றோம். எங்களை யாரும் அசைக்க முடியாது என்று இறுமாப்புடன் எம்.எல்.ஏ அலுவலகம் என்று சட்ட விரோதமாக அறிவித்துக் கொண்டனர். இதன் பின்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்ததுடன் நடவடிக்கை மந்தமாக இருந்ததால் சட்டமன்ற முற்றுகை போராட்டம் உள்ளிட்ட பலகட்ட போராட்டங்களை அறிவித்தது.

      இதன் பின்னர் விழித்துக் கொண்ட காவல்துறை உயர்அதிகாரிகள் மமக வின் ஹைதர் அலி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை நேரில் அழைத்து கடுமையாக எச்சரித்து அரைமணி நேரத்தில் உணர்வு அலுவலக சாவியை கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும்; இல்லாவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்தனர்.

      நபிமார்கள் வரலாறு 6 (ஆதம் நபி வரலாறு 2)

      உலகின் முதல் மனிதர் ஆதாமா ஏவாளா?

      உலகத்தின் உருவாக்கம் ஒரு மிகப்பெரும் அற்புதம்.அது போல் மனிதனின் உருவாக்கம் அதைவிட அற்புதம்.இந்த இரண்டில் உலகின் தோற்றத்தைப் பற்றி இரண்டுவிதமான கருத்தோட்டங்கள் உண்டு.

      முதலாவது உலகம் தானாக இயற்கையாக உருவாகியது என்பதாகும் இது நாத்தீகத்திற்கு கடவுல் இல்லை என்ற கொள்ளைக்கு வக்காலத்து வாங்குவதற்காக உருவாக்கப் பட்ட கருத்து நிலை பெறாமல் பெயருக்காக சொல்லிக் கொள்ளப் படுகிறதே தவிர இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

      இரண்டாவது உலகைப் படைத்தவன் இறைவன்.இறைவன் படைக்காவிடில் இந்த உலகம் உருவாகியிருக்க முடியாது அவனுடைய ஆற்றலினால் உருவாக்கப் பட்டதினால்தான் நேர்த்தியான ஒரு சீரமைப்பில் உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

      இந்த இரண்டு கருத்துக்களில் இதுவரை நிரூபிக்க முடிந்தது இரண்டாவது கருத்தைத்தானே தவிர முதல் கருத்தை அல்ல.முதலாவது கருத்து கடவுல் இல்லை என்று சொல்லப் பட்ட செய்தியை மக்கள் மத்தியில் நிலைக்கச் செய்வதற்காக சொல்லப்பட்டதாகும்.

      மனிதனின் உருவாக்கம்.

      மனிதனின் தோற்றத்தைப் பொருத்தவரை மனிதன் கடவுளினால் படைக்கப் பட்டான் என்று மதங்களும் அறிவியலாளர்களின் ஒரு பகுதியினரும் கூறுகின்றனர்.

      இன்னொரு பகுதியினர் இல்லை மனிதன் தானாக உருவாகிய உலகத்தில் இயற்கையின் பருவ நிலை மாற்றத்தினால் குரங்கிலிருந்து பரினாம வளர்ச்சி பெற்று உருவாகியவன் என வாதிடுகின்றனர்.இந்த வாதாட்டத்தின் உண்மை நிலையை முதலில் நாம் அறிய வேண்டும்.

      அதாவது மனிதன் படைக்கப் பட்டானா? அல்லது பரிணாம வளர்ச்சி மூலம் உருவானானா? இதுதான் நாம் முதலில் ஆராய வேண்டிய கேள்வி.இந்தக் கேள்விக்குறிய பதிலைப் பார்த்துவிட்டு முதல் மனிதன் யார் ஆதாமா? அல்லது ஏவாளா? என்பதை ஆராய்வோம்.

      samedi 18 juin 2011

      இத்தா காலத்தில் வெளியே செல்லலாமா ?

      இத்தா காலத்தில் வெளியே செல்லலாமா ?
      • இத்தா காலத்தில் வெளியே செல்லலாமா ?
      • பதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன்


        vendredi 17 juin 2011

        நபிமார்கள் வரலாறு 5 (ஆதம் நபி வரலாறு 1)


        இந்த உலகைப் படைத்து பாதுகாத்து ஆட்சி செய்து கொண்டிருக்கக் கூடிய ஏக இறைவன் அல்லாஹ் உலகில் வாழ்வதற்குறிய சிறப்பான படைப்பாக மனிதனை ஏற்படுத்தினான்.

        ஆனால் மனிதனோ தான் நினைத்தவாறு வாழ்ந்து உலக வாழ்வுக்குப் பிறகுள்ள நிறந்தரமான மறுமை வாழ்வில் தோற்றுவிடக் கூடாது என்பதற்காக மனிதனை சீர் திருத்தம் செய்வதற்கு காலத்திற்குக் காலம் நபிமார்களை தூதர்களை அனுப்பி மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை கற்றுத் தந்தான்.

        மனிதப் படைப்பை இறைவன் ஏற்படுத்தியதில் முதல் படைப்பாக ஆதாம் என்ற ஆதாமையும் அவருக்குத் துணையாக ஏவாள் என்ற ஹவ்வா அவர்களையும் ஏற்படுத்தினான்.

        இந்த ஆதம் (அலை)அவர்களைப் பற்றி வரலாறு என்ற பெயரில் பலர் பல புனைக் கதைகளையும் தங்கள் சுய எண்ணங்களையும் எழுத்தாக்கியுள்ளனர்.

        குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் நபிமார்களின் வரலாற்றை தொகுக்கும் இந்த முயற்சியில் ஆதம்(அலை)அவர்களின் வரலாற்றை முதலாவதாகப் பார்ப்போம்.

        இந்தத் தொடரில்.....
        • முதல் மனிதர் ஆதாமா? ஏவாளா?
        • ஆதம் எங்கு இறக்கப்பட்டார்?
        • ஆதம் இலங்கையில் இறக்கப்பட்டாரா?
        • இலங்கை முஸ்லீம்களின் பூர்விகம் என்ற புத்தகத்திற்கு பதில்.
        • ஆதம் நபியின் மொழி தமிழா?
        • இலங்கையையும் இந்தியாவையும் பிரிப்பது ஆதாம் பாலமா?

        mercredi 15 juin 2011

        கிரகணத் தொழுகை

        தலைப்பிறை பற்றி முடிவு செய்வதற்கான ஆதாரங்களில் சூரிய சந்திர கிரகணங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

        எவரது மரணத்திற்காகவோ, பிறப்புக்காகவோ சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் ஏற்படுவதில்லை. நீங்கள் சூரிய, சந்திர கிரகணங்களைக் கண்டால் அது விலகும் வரை தொழுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
        அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)
        நூல்: புகாரி 1042

        பிறையை தீர்மானிப்பது

        பிறையை எப்படித் தீர்மானிப்பது என்பதைப் பற்றிய ஆய்வில் கிரகணம் குறித்த மார்க்கத்தின் நிலைப்பாட்டை விளக்குவது அவசியமாகும். முதல் பிறை, பௌர்ணமி, அமாவாசை போன்றவை பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படும் மாற்றங்களாகும்.

        இதே போல் சூரிய, சந்திர கிரகணங்களும் பூமி, சந்திர சுழற்சியை அடிப்படையாகக் கொண்டே நிகழ்வதால் கிரகணத்தைப் பற்றி நாம் எடுக்கும் முடிவுகள் பிறை விஷயத்திலும் பிரதிபலிக்கும்.

        இதைக் கவனத்தில் கொண்டு கிரகணம் குறித்து ஆராய்வோம்.கிரகணம் ஏற்பட்டால் அந்த நேரத்தில் தொழுவது நபிவழி என்பதை மேற்கண்ட ஹதீஸ் கூறுகின்றது. இன்று அமெரிக்காவில் சந்திர கிரகணம் ஏற்படுவதை நாம் தொலைக் காட்சியில் நேரடியாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

        mardi 14 juin 2011

        முனாஃபிக்குகளின் மறுமை நிலை என்ன ?

        முனாஃபிக்குகளின் மறுமை நிலை என்ன ?
        • முனாஃபிக்குகளின் மறுமை நிலை என்ன ?
        • பதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன்


          lundi 13 juin 2011

          சுன்னத்தான நான்கு ரகாத் தொழுகையை இரண்டு இரண்டாக தொழலாமா ?

          சுன்னத்தான நான்கு ரகாத் தொழுகையை இரண்டு இரண்டாக தொழலாமா?
          • சுன்னத்தான நான்கு ரகாத் தொழுகையை இரண்டு இரண்டாக தொழலாமா ?
          • லுஹா தொழுகையை எப்படி பிரித்து தொழுவது ? 
          • பதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன்

          ஹஜ் பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பாஸ்போர்ட்டை அடுத்த மாதம் 25-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும்

          புதுடெல்லி, ஜுன்.13-

          இந்திய ஹஜ் கமிட்டியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்கள் பாஸ்போர்ட்டை அடுத்த மாதம் (ஜுலை) 25-ந் தேதிக்குள் அந்தந்த மாநில ஹஜ் கமிட்டியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது.

          அகில இந்திய ஹஜ் கமிட்டியின் மாநாடு டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில், வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதர், ஜெட்டாவில் உள்ள இந்திய துணை தூதர், பல்வேறு மாநிலங்களின் ஹஜ் கமிட்டியின் தலைவர்கள், மத்திய ஹஜ் கமிட்டியின் உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள்.

          மேற்கண்ட தகவலை, இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத்தலைவரும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் தலைவருமான `பிரசிடெண்ட்' அபூபக்கர் தெரிவித்தார்.

          - செய்தி : தினத்தந்தி

          samedi 11 juin 2011

          இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 3

          ஃபிரான்சில் 11/06/2011 அல்லாஹ்வின் அருளால் ஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத்தினர் மூன்றாவது முறையாக (பெண்களுக்காக) நடத்திய இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றது.இது முதன் முறையாக பெண்களுக்காக நடத்தப் பட்ட நிகழ்ச்சி ஆகும்.இந்நிகழ்ச்சியில் மார்க்கம் சம்பந்தப் பட்ட கேள்விகளுக்கு சிறந்த முறையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் p.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பதிலளித்தார்கள்.இந்த நிகழ்ச்சி ஆன்லைன்பிஜே இணையத்தளத்தில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப் பட்டது.இதில் பல பெண்கள் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டு கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்றனர்.. இனியும் இதுபோன்ற நிகழ்சிகளை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள் .

          நிகழ்ச்சியின் நடுவே ஒரு கிருத்துவ சகோதரி கலந்து கொண்டு கேள்விகள் கேட்டு தெளிவு பெற்று சென்றார் . அவருக்கு பிரார்த்தனை (துஆ செய்யும் முறைகள் ) என்ற தலைப்பில் ஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத்தினரால் தொகுக்கப்பட்ட பிரசுரம் அன்பளிப்பு செய்யப் பட்டது ,மேலும் அனைவருக்கும் வழங்கப் பட்டது .பின்பு நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது .

          - ஃபிரான்ஸ் தௌஹீத் ஜமாத்

          சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் – மாநிலத் தலைவர் பேச்சு!

          சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் – மாநிலத் தலைவர் பேச்சு!
          Download Video
          • இன்ஷா அல்லாஹ் சட்ட மன்றும் கூடும் முதல் நாள் சட்மன்ற முற்றுகைப் போராட்டம் – மாநிலத தலைவர் பேச்சு!

          செய்தி : TNTJ.NET

          vendredi 10 juin 2011

          உளூவை நீக்குபவை


          உளூச் செய்த பின்னால் நம்மிடமிருந்து ஏற்படும் சில நிகழ்வுகளால் உளூ நீங்கி விடும். அவ்வாறு நீங்கி விட்டால் மீண்டும் உளூச் செய்து தான் தொழ வேண்டும் என்று திருக்குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகின்றன. அவற்றைக் காண்போம்.

          மலஜலம் கழித்தல்

          உளூச் செய்த பின் ஒருவர் மலம் கழித்தாலோ அல்லது சிறுநீர் கழித்தாலோ அவர் செய்த உளூ நீங்கி விடும். அவர் மீண்டும் உளூச் செய்த பின்பே தொழ வேண்டும். நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ,பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.
          அல்குர்ஆன் 4:43

          நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.(அல்குர்ஆன் 5:6)

          மலம் கழித்த ஒருவர் தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து தொழ வேண்டும் என்பதையும், தண்ணீர் கிடைத்தால் உளூச் செய்வது அவசியம் என்பதையும், ஏற்கனவே செய்த உளூவை மலம் கழித்தல் நீக்கி விடும் என்பதையும் இவ்விரு வசனங்கள் கூறுகின்றன.

          mardi 7 juin 2011

          நபிமார்கள் வரலாறு 4(நபிமார்களின் குடும்பம்)

          நபிமார்கள் வரலாறு என்ற தொடரில் நபிமார்கள் அனைவரும் மனிதர்கள் தாம் என்பதற்காக ஆதாரங்களை நாம் தொடராக பார்த்து வருகிறோம். இந்தத் தொடரில் அதற்கான இன்னும் சில ஆதாரங்களைப் பார்ப்போம்.

          நபிமார்களின் குடும்ப அமைப்பு

          நாம் எப்படி நமது வாழ்க்கையில் குடும்பமாக வாழ்கிறோமோ, குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறோமா அது போல் நபிமார்களும் தங்கள் வாழ்வில் குடும்பமாக வாழ்ந்திருக்கிறார்கள், குழந்தைகளையும் பெற்றிருக்கிறார்கள் என்பதற்கு திருக்குா்ஆனிலும் நபி மொழிகளிலும் நிறைய சான்றுகளைப் பார்க்க முடியும்.

          இறை தூதர்கள் என்றால் துறவிகளாகத் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலானவர்கள் மனதில் குடி கொண்டிருக்கிறது. ஆனால் இந்த எண்ணம் தவறானது என்பதை சுட்டிக்காட்டி நபிமார்களும் மனிதர்கள் என்பதை எல்லா விதங்களிலும் மக்களுக்கு தெளிவு படுத்திய பெருமை இஸ்லாத்தை மட்டுமே சேறும்.

          மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான் எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.(4:1)

          சட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம்


           மாபெரும் சட்ட மன்ற முற்றுகை போராட்டம்.. 
           ஏகத்துவத்தை ஓங்கச் செய்ய அணிதிரள்வீர்!
          மமகட்சியின் இந்த அராஜகங்களுக்கு அதிமுக அரசின் ஆதரவு இருக்கிறதா? அல்லது அரசுக்குத் தெரியாமலேயே இவர்கள் ஆட்டம் போடுகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், 09/06/2011 வியாழக்கிழமை அன்று தமிழக சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது. அதற்காக மக்களை பெருந்திரளாக திரட்டும் பணியையும் முடுக்கியும் விட்டது.

          தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரங்களைக் கண்டு சுறுசுறுப்படைந்த காவல்துறை உயர் அதிகாரிகள் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை அழைத்து ”உணர்வு அலுவலகம் உங்களுடையது தான், 9 ஆம் தேதிக்குள் உங்கள் கையில் அந்த அலுவகம் ஒப்படைக்கப்படும்” என்று திட்டவட்டமாக உறுதியளித்தனர்.

          அவர்களின் வாக்குறுதி நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாலும், அதிகாரிகள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதாலும் இந்த சட்டசபை முற்றுகைப் போராட்டம் 14 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பது என முடிவு செய்யப்பட்டள்ளது.

          கயவர்களால் கள்ளத்தனமாக அபகரிக்கப்பட்ட உணர்வு அலுவலகத்தை 14 ஆம் தேதிக்குள் நம்மிடம் ஒப்படைக்காவிட்டால் 14 ஆம் தேதியன்று சட்டமன்றக்கூட்டம் நடக்குமேயானால் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்துவது என்றும், அதற்குள் சட்டமன்றக் கூட்டம் முடிக்கப்பட்டு விட்டால், அதே தேதியில் முதல்வர் வீடு முற்றுகைப் போராட்டத்தை நடத்துவது என்றும் முடிவு செய்து அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

          செய்தி : TNTJ.NET

          dimanche 5 juin 2011

          வட மறைக்காயர் அலுவலகம் யாருக்கு சொந்தம் ? நடந்தது என்ன ? சட்ட மன்ற முற்றுகை போராட்டம் ஏன் ?


          1. சென்னை மண்ணடி எண்: 7, வடமரைக்காயர் தெருவிலுள்ள இரண்டு மாடி கட்டிடம் முஸ்லிம் ட்ரஸ்ட் பெயரில் அதன் ஆயுட்கால சேர்மன் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களது பெயரில் பதிவு செய்யப்பட்டதாகும்

          2. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அமைப்பாளராக இருந்த காரணத்தினால் அந்த கட்டிடத்தின் முதல் மாடியில் தமுமுக அலுவலகம் இயங்குவதற்கு அனுமதி வழங்கியிருந்தார்.

          3. உணர்வு வார இதழை நிர்வகித்து வரும் முஸ்லிம் மீடியா ட்ரஸ்டின் சேர்மனாகவும் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இருந்த காரணத்தினால் அந்த கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் உணர்வு வார இதழ் அலுவலகம் இயங்குவதற்கும் அனுமதியளித்திருந்தார்.

          4. 2004ஆம் ஆண்டு தமுமுகவிலிருந்து பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களும் அதன் முன்னனி பேச்சாளர்களும் கூண்டோடு விலகியதையடுத்து தமுமுக அலுவலகம் அந்த கட்டிடத்தில் இயங்குவதற்கு தடை செய்ய அதிகாரமிருந்தும் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அதை செய்யவில்லை

          5. எவ்வித சட்டப்பூர்வ உரிமையும் இல்லாமல் முஸ்லிம் ட்ரஸ்ட் கட்டடத்தின் முதல்மாடியில் இயங்கிவந்த தமுமுகவினர், 2004ஆம் ஆண்டு உணர்வு அலுவலக ஊழியர்களைத் தாக்கி பொருட்களைச் சேதப்படுத்தி ரவுடித்தனம் செய்ததால் காவல்துறை மூலம் கிரிமினல் வழக்கு பதிவுசெய்யப்பட்டு RDO விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

          6. RDO விசாரணையில் இறுதித் தீர்ப்பு வரும் வரை முதல் மாடியை தமுமுக வும், இரண்டாம் மாடியை உணர்வு இதழும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; யாரும் யாருக்கும் இடையூறு செய்யக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

          samedi 4 juin 2011

          தாவா பயிற்சி முகாம் வீடியோ 1

          தாவா பயிற்சி முகாம் 1

          • தலைப்பு : வழிகெட்ட கொள்கைகள்.
          • உரை : பி.ஜைனுல் ஆபிதீன்.
          • தயாரிப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

          vendredi 3 juin 2011

          இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 3 விளம்பரம்

          வீடியோவை பார்க்க புகைப்படத்தை
          சொடுக்கவும்

          jeudi 2 juin 2011

          உம்ரா செய்யும் முறை


          உம்ரா செய்வது ஹஜ்ஜை நிறைவேற்றுவது போல் கடமை இல்லாவிட்டாலும் சிறந்ததாகவும் அதிக நன்மை பெற்றுத்தரக் கூடிய காரியமாகவும் இருக்கிறது.

          ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்.(அல் குர்ஆன் 2:196)

          அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
          ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும். பாவம்கலவாத ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(புஹாரி 1773)

          ரமளானில் உம்ரா செய்தல்

          இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
          நபி (ஸல்) அவர்கள் அன்ஸாரிப் பெண்களில் ஒருவரிடம் -இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டார்கள்; நான் அதை மறந்துவிட்டேன்! என அவரிடமிருந்து அறிவிக்கும் அதாஉ (ரஹ்) கூறுகிறார்- நீ ஏன் எங்களுடன் ஹஜ் செய்யவில்லை? எனக் கேட்டார்கள். அதற்கவர், எங்களிடம் இருந்த, தண்ணீர் கொண்டு வருவதற்கான ஓர் ஒட்டகத்தில் இன்னாரின் தந்தையும் அவருடைய மகனும் (எனது கணவரும் மகனும்) ஏறிச் சென்றுவிட்டனர்; மற்றொரு ஒட்டகத்தை விட்டுச்சென்றுள்ளனர்; அதன் மூலம் நாங்கள் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கிறோம்! என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ரமளான் வந்துவிட்டால் அதில் நீ உம்ரா செய்வாயாக! ஏனெனில், ரமளானில் உம்ரா செய்வது ஹஜ்ஜாகும்! எனக் கூறினார்கள்; அல்லது அது போன்ற கருத்தைக் கூறினார்கள்.(புஹாரி 1782)

          இஹ்ராம் கட்ட வேண்டிய இடங்கள்

          ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வரக்கூடியவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடங்களை இஹ்ராம் கட்டுவதற்காக நிர்ணயம் செய்துள்ளனர். அந்த இடங்களை அடைந்ததும் இஹ்ராம் கட்ட வேண்டும்.

          மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைஃபாஎன்ற இடத்தையும், ஷாம் (சிரியா) வாசிகளுக்கு ஜுஹ்ஃபாஎன்ற இடத்தையும், நஜ்துவாசிகளுக்கு கர்னுல் மனாஸில்என்ற இடத்தையும், யமன்வாசிகளுக்கு யலம்லம்(இப்போதைய ஸஃதியா) என்ற இடத்தையும் இஹ்ராம் கட்டும் இடங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள். இந்த எல்லைகள் இந்த இடங்களில் உள்ளவர்களுக்கும், இந்த இடங்களில் வசிக்காமல் இந்த இடங்கள் வழியாக ஹஜ், உம்ராவை நாடி வரக்கூடியவர்களுக்கும் இஹ்ராம் கட்டும் இடங்களாகும். இந்த எல்லைகளுக்கு உட்பட்டு வசிப்பவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடமே எல்லையாகும். மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்ட வேண்டும்எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

          அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
          நூல்: புகாரி 1524, 1526, 1529, 1530, 1845.