புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

அரபு மொழி பயிற்சி


அரபு மொழி பயிற்சி
ஆசிரியர் : பி.ஜைனுல் ஆபிதீன்
திருக்குர்ஆனை எளிதில் ஓதுவதற்காக நடத்தப்பட்ட சிறப்பு அரபு மொழி பயிற்சி

குரானைத் தொட்டு முத்தமிடலாமா?


திருமறைக் குர்ஆனைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் பலர் குர்ஆனைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அப்படி முத்தமிடுவதை ஒரு வணக்கமாகக் கூட நினைக்கிறார்கள். குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்ற காரணத்தினால் தான் குர்ஆன் மகத்துவம் அடைகிறது..

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை


மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)


நபி வழி தொழுகை வீடியோ தொழுகை மற்றும் உளு செய்யும் முறை செயல் முறை - கோவை ரஹ்மத்துல்லாஹ் வீடியோ - TNT...

தொழுகை முறை


'நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் - ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 812

FRTJ ஃபிரெஞ்சு


dimanche 3 août 2014

சூனியம்- என்னதான் பிரச்சனை?

சூனியம்- என்னதான் பிரச்சனை?
நீண்ட ஆய்வுகள்,பயான்கள்,விளக்கங்கள்,விதண்டாவாதங்களுக்கு தக்க பதில்கள் போன்ற அனைத்தையும் கொடுத்தாகிவிட்டது. குர்ஆன் ஆயத்துக்களையும் ஹதீஸ் ஆதாரங்களையும் காட்டியும் தெளிவு படுதியாகி விட்டது.சூனியம் இருந்தது அல்லது இருக்கிறது என்று 
நிரூபித்து காட்ட சொல்லி அறைகூவலும் விடப் பட்டது.எதை சொன்னாலும் அதில் விதண்டாவாதம் செய்தே வருகிறார்களே அது ஏன்?
விளக்கம் 
1 TNTJ ஒன்றை இருக்கு என்றால் இவர்கள் அதை இல்லை என்று மார்க்க வழியில் மறுக்க பார்பார்கள்.இல்லை என்றால் இருக்கு என்பார்கள்.
2 மார்க்கத்தை நன்றாக அறிந்த உடன் அதில் வரம்பு மீறி நடந்து கொள்வார்கள்.
3 தங்கள் பத்வா கொடுத்து விட்டால், யாரவது தவறு என்று சுட்டிக் காட்டினால் திருத்தி கொள்ள மாட்டார்கள்.
4 ஹதீஸ்கள் குரானுக்கு முரண் பட்டாலும் அதை எதாவது விளக்கம் கொடுத்து நிறுவ பார்பார்கள்.

ஆகவே இது போன்ற எதாவது ஒரு காரணத்தை வைத்து தான் சூனியம் என்றால் magic என்றும் சூனியம் செய்பவர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.
என நன்றாகத் தெரிந்திருந்தும் தெளிவான வழிகேட்டில் இருந்தும் அவர்களை நம்பியவர்களை வழிகேட்டில் விட்டும் வருகிறார்கள்.

சரி சூனியம் இருக்கிறதா இல்லையா?
1 யூதர்கள் மற்றும் நிராகரிப்பாளர்கள் இறைத் தூதர்களை சூனியம் செய்பவர்கள் என்றும் அவர்கள் கொண்டு வந்தது வேதமல்ல அது சூனியம் 
   என்றும் மக்களை நேர்வழி  இலிருந்து திசை திருப்ப பயன் படுத்தினார்கள்.
2 இந்த காலத்தில் சோதிடர்கள் மற்றும் ஜின்களை வைத்திருப்பதாகக் கூறிக் கொள்ளும் குறி காரர்கள் போன்ற வர்கள் தங்களை நாடி 
   வரும் மக்களுக்கு எதையாவது கூறி பணம் பறிக்க சூனியம் செய்கிறேன் என்று ஏமாற்றிவந்தார்கள்.
3 தவறு செய்பவர்கள்  தாங்கள் மாட்டிக் கொள்ள கூடாது என்பதற்காகவும் மன ரீதியாக ஏமாற்றவும் மிரட்டி காரியம் செய்வதற்க் காகவும் 
   சூனியம் என்று இல்லாத ஒன்றை காட்டி தப்பித்து வந்தார்கள்.
4 தகாத நோய் எதாவது ஒன்று வந்து விட்டால் அதை சொல்ல வெட்கப் பட்டுக்கொண்டு யாரோ சூனியம் செய்து விட்டார்கள் என்று 
   என்றும் மக்களை ஏமாற்றி வந்தார்கள்.
5 ஒருவன் ஒரு தவறான வழியில் பெண் தொடர்பு இருந்தால் அவள் அவனை சூனியம் செய்த காரணத்தினால்தான் அவ்வாறு செய்கிறான் என்று 
   அவனை காப்பாற்ற இல்லாத சூனியத்தை பயன்படுத்தி வந்தார்கள்.

சூனியம் வழிகேடு என்பதற்கும் சூனியக் காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள் என்பதற்கும் ஏராளமான குர் ஆன் ஆயத்துகளை காட்டி விட்டோம் 
ஷைத்தானிற்கு சூனியம் செய்ய முடியும் அளவிற்கு சக்தி உள்ளது என்ற நம்பிக்கை பெரிதா ?அல்லது எல்லாம் வல்ல இறைவன் தவிர வேறு 
எவனும் எந்தவித தீங்கும் செய்ய இயலாது.என் இறைவன் எனக்கு நல்லதே செய்வான் என்ற நம்பிக்கை பெரிதா? சிந்தியுங்கள்!

சூனியத்தால் எந்த தீங்கும் செய்ய இயலாது ஆனால் சூனியம் உள்ளது என்று 'இருக்கு ஆனால் இல்லை' என்ற ஸ்டைலில் மாற்றி மாற்றி பேசிவருகிறார்கள்.இவர்களை நம்பி இவர்கள் பின்னால் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.ஏனெனில் இருக்கு என்ற 
அவர்களது நம்பிக்கையே நாளை அவர்களுக்கு எதாவது ஒரு கேட்ட விஷயம் நடந்தால் சூனியத்தால் ஏற்பட்டிருக்குமோ என்ற எண்ண  வைத்து 
வழிகேட்டில் விழ வைத்துவிடும் .அல்லாஹ் காப்பாற்றுவானாக.ஆனால் சூனியத்தை நம்பாதவர்கள் ஒரு பிரச்சனை வந்தால் இது அல்லாஹ்வின் 
சோதனை என்று அவன் மேல் நம்பிக்கை வைத்து பொறுமை யாக இருப்பார்கள்.

ஆகவே சூனியம் இருக்கிறது அதற்க்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் உள்ளது என்று உங்களிடம் யாராவது வந்தால் அவர்களிடம் கூறுங்கள் 
நாங்கள் அல்லாஹ்வையே ஈமான் கொண்டோம் அவனையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம் நீங்களும் இந்த வழிகேட்டிலிருந்து விலகிவிடுங்கள் 
அல்லது நாங்கள் வழிகேட்டிலிருந்து விலகிவிட்டோம் என்று கூறி விடுங்கள்.அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன், (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சுவனத்தில் நுழைய மாட்டார்கள். அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி) நூல் : அஹ்மது (26212)

முஹம்மத் இன்சாப் .