புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

அரபு மொழி பயிற்சி


அரபு மொழி பயிற்சி
ஆசிரியர் : பி.ஜைனுல் ஆபிதீன்
திருக்குர்ஆனை எளிதில் ஓதுவதற்காக நடத்தப்பட்ட சிறப்பு அரபு மொழி பயிற்சி

குரானைத் தொட்டு முத்தமிடலாமா?


திருமறைக் குர்ஆனைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் பலர் குர்ஆனைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அப்படி முத்தமிடுவதை ஒரு வணக்கமாகக் கூட நினைக்கிறார்கள். குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்ற காரணத்தினால் தான் குர்ஆன் மகத்துவம் அடைகிறது..

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை


மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)


நபி வழி தொழுகை வீடியோ தொழுகை மற்றும் உளு செய்யும் முறை செயல் முறை - கோவை ரஹ்மத்துல்லாஹ் வீடியோ - TNT...

தொழுகை முறை


'நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் - ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 812

FRTJ ஃபிரெஞ்சு


dimanche 29 juin 2014

வித்ருத் தொழுகை

இஷாத் தொழுகைக்குப் பின்னால் ஃபஜருடைய பாங்கு சொல்லப்படும் வரை இடைப்பட்ட நேரத்தில்ஒற்றைப்படையாக உரியாக நாம் தொழும் தொழுகைக்கு வித்ருத் தொழுகை என்று கூறப்படுகின்றதுமேலும்இத்தொழுகைக்கு இரவுத்தொழுகை என்றும் கூறப்படுகின்றதுஇரவின் கடைசிப் பகுதியில் இத்தொழுகையைதொழுதால் அதற்கு தஹஜ்ஜத் தொழுகை என்று கூறப்படுகின்றது.
இத்தொழுகைக்கு மார்க்கத்தில் ஏராளமான சிறப்புகள் சொல்லப்பட்டிருக்கின்றது.
விலகி விடும் விலாப்புறங்கள்
அச்சத்துடனும்எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்துவிலகும்நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்செலவிடுவார்கள்அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குப் பரிசாககண் குளிரும் வகையில் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளதை எவரும் அறிய மாட்டார்.
(அல்குர்ஆன் 32:16,17)
நரகத்திலிருந்து பாதுகாப்பு
நபி (ஸல்அவர்கள் காலத்தில் ஒருவர் கனவு கண்டால் அதை நபி (ஸல்அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம்நானும்ஒரு கனவு கண்டுஅதை நபி (ஸல்அவர்களிடம் எடுத்துரைக்க ஆசைப்பட்டேன்அப்போது நான் இளைஞனாகவும்பள்ளிவாசலில் உறங்கக் கூடியவனாவும் இருந்தேன்இரண்டு மலக்குகள் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டுசென்றார்கள்கிணற்றுக்குச் சுவர் கட்டப்பட்டது போல் அந்த நரகத்திற்கும் கட்டப்பட்டிருந்ததுஅதற்கு இரண்டுகொம்புகள் இருந்தனஇதில் எனக்குத் தெரிந்த சில மனிதர்களும் கிடந்தனர்அப்போது நான் நரகத்தை விட்டும்அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகின்றேன் என்று கூறினேன்அப்போது வேறு ஒரு மலக்கு என்னைச் சந்தித்து நீர்பயப்படாதீர் என்று கூறினார்இவ்வாறு நான் கனவு கண்டேன்இக்கனவை ஹஃப்ஸா (ரலியிடம் கூறினேன்அவர்கள் நபி (ஸல்அவர்களிடம் கூறினார்கள்அப்போது நபி (ஸல்அவர்கள், "அப்துல்லாஹ் இரவில் தொழுபவராகஇருந்தால் அவர் மனிதர்களிலேயே மிகவும் நல்லவர்!'' என்று கூறினார்கள்அதன் பின்னர் குறைந்த நேரமே தவிர நான்உறங்குவதில்லை.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி 1121, 1122
பொறாமை கொள்ளத்தக்க அமல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது.
1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான்அதனை அவர் இரவு நேரங்களில் ஓதிவழிபடுகின்றார்.
2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை அளித்துள்ளான்.  அவர் அதனை இரவுபகல் எல்லா நேரங்களிலும்தானம் செய்கின்றார்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின்  உமர் (-),  நூல் : புகாரி 5025
வல்ல இறைவனின் வானுலக வருகை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்:
நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது, "என்னிடம்யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன்யாரேனும் என்னிடம் கேட்டால் நான் அவருக்குக்கொடுக்கின்றேன்யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை நான் மன்னிக்கின்றேன்'' என்று கூறுவான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (-)  நூல் : புகாரி 1145
கேட்டது கிடைக்கும் நேரம்
நிச்சயமாக இரவில் ஒரு நேரமுண்டுஒரு முஸ்லிமான மனிதர் சரியாக இந்த நேரத்தில் இம்மைமறுமை தொடர்பானஎந்த நன்மையை வேண்டினாலும் அதை இறைவன் அவருக்கு வழங்காமல் இருப்பதில்லைஇது ஒவ்வொரு இரவிலும்நடக்கின்றது என்று நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்ஜாபிர் (ரலி)
 நூல்முஸ்லிம் 1259
சுவனமே கூலி
"ஸலாமைப் பரப்புங்கள்ஏழைகளுக்கு உணவளியுங்கள்மக்கள் தூங்கும் போது தொழுங்கள்! (இதனால்)சொர்க்கத்தில் நுழையுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி)
நூல் : திர்மிதீ 2409
தொழத் தொடங்கியவர் விடலாகாது
நபி (ஸல்அவர்கள் என்னிடம், "அப்துல்லாஹ்வேஇரவில் தொழும் வழக்கமுடையவர் திடீரென அதை விட்டதைப்போல் ஆகி விடாதீர்!'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி)
நூல் : புகாரி 1152
கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்தஅதிக நன்மையைப் பெற்றுத் தரக் கூடிய தொழுகை,இரவில் தொழும் தொழுகையாகும்.
"ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்புஅல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும்நோன்பாகும்கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகைஇரவில் தொழும் தொழுகையாகும்'' என்று நபி(ஸல்அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்அபூஹுரைரா (ரலி)
நூல்முஸ்லிம் 1982
இரவில் தொழப்படும் தொழுகைக்குப் பல பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன1. ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை)2.கியாமுல் லைல் (இரவில் நிற்குதல்3. வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை4. தஹஜ்ஜுத் (விழித்துத் தொழும்தொழுகைஆகிய பெயர்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.
இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும்ஒருவர் இரவுத் தொழுகையை முடித்துக் கொள்ளநாடினால் ஒற்றைப் படை எண்ணிக்கை தொழுது அத்தொழுகையை முடிக்க வேண்டும்.
ஒரு மனிதர் நபி (ஸல்அவர்களிடம் இரவுத் தொழுகையைப் பற்றி கேட்டார்அதற்கு நபி (ஸல்அவர்கள், "இரவுத்தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும்உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகையைப் பற்றிஅஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும்அவர் (முன்னர்தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்'' என்று நபி(ஸல்அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்இப்னு உமர் (ரலி)
நூல்புகாரீ 990
இரவுத் தொழுகையின் நேரம்
இஷா தொழுகை முடிந்ததிலிருந்து பஜ்ர் நேரம் வரும் வரை இத்தொழுகையைத் தொழலாம்நபி (ஸல்அவர்கள்அனைத்து நேரங்களிலும் தொழுதுள்ளார்கள்.
நபி (ஸல்அவர்கள் இஷாத் தொழுகையை முடித்ததிலிருந்து பஜ்ர் தொழுகை வரை (மொத்தம்11 ரக்அத்கள்தொழுதுள்ளார்கள்.
அறிவிப்பவர்ஆயிஷா (ரலி)
நூல்முஸ்லிம் 1216
இரவின் கடைசியின் மூன்றிலொரு பகுதி நேரமான போது 11 ரக்அத்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர்இப்னுஅப்பாஸ் (ரலி)
நூல்புகாரீ 7452
நபி (ஸல்அவர்கள் ஒரு நாள் இரவின் கடைசி நேரத்தில் எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)
அறிவிப்பவர்இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்முஸ்லிம் 376
நபி (ஸல்அவர்கள் பாதி இரவான போது எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)
அறிவிப்பவர்இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்புகாரீ 183
நபி (ஸல்அவர்கள் இரவின் அனைத்து நேரத்திலும் வித்ர் தொழுதுள்ளார்கள்அவர்களின் வித்ர் (சில நேரங்களில்)ஸஹர் வரை நீடித்துள்ளது.
அறிவிப்பவர்ஆயிஷா (ரலி)
நூல்புகாரீ 996
ரக்அத்களின் எண்ணிக்கை
8+3 ரக்அத்கள்
"ரமலானில் நபி (ஸல்அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?'' என்று ஆயிஷா (ரலிஇடம் நான் கேட்டேன்.அதற்கவர்கள், "நபி (ஸல்அவர்கள் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விடஅதிகமாகத் தொழுததில்லைநான்கு ரக்அத்கள் தொழுவார்கள்அதன்  அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே!பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள்அதன் அழகையும் நீளத்தையும் கேட்காதேபின்னர் மூன்று ரக்அத்கள்தொழுவார்கள்'' என்று விடையளித்தார்கள்.
"அல்லாஹ்வின் தூதரேவித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா?'' என்று நான் கேட்டேன்அதற்கு நபி(ஸல்அவர்கள் "ஆயிஷாஎன் கண்கள் தாம் உறங்குகின்றனஎன் உள்ளம் உறங்குவதில்லை'' என்றுவிடையளித்தார்கள்.
அறிவிப்பவர்அபூஸலமா
நூல்கள்புகாரீ 1147, முஸ்லிம் 1220?
12+1 ரக்அத்கள்
நபி (ஸல்அவர்களின் மனைவியும் எனது சிறிய தாயாருமான மைமூனா (ரலிஅவர்களின் வீட்டில் நான் ஒரு நாள் இரவுதங்கினேன்நான் தலையணையின் பக்க வாட்டில் சாய்ந்து தூங்கினேன்நபி (ஸல்அவர்களும் அவர்களதுமனைவியும் அதன் மற்ற பகுதியில் தூங்கினார்கள்இரவின் பாதி வரை - கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம் - நபி(ஸல்அவர்கள் தூங்கினார்கள்பின்னார் விழித்து அமர்ந்து தங்களுடைய கையால் முகத்தைக் தடவித் தூக்கக்கலக்கத்தைப் போக்கினார்கள்பின்னர் ஆலுஇம்ரான் என்ற அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களைஓதினார்கள்பின்னர் எழுந்து சென்றுதொங்க விடப்பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து (தண்ணீர் எடுத்து)உளூவை நல்ல முறையில் செய்தார்கள்நானும் எழுந்து நபி (ஸல்அவர்கள் செய்தது போன்று (உளூசெய்து விட்டுநபி (ஸல்அவர்களின் அருகில் போய் நின்றேன்அவர்கள் தங்கள் வலக்கரத்தை என் தலை மீது வைத்தார்கள்எனதுவலது காதைப் பிடித்து (அவர்களின் வலப்பக்கம்நிறுத்தினார்கள்இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்மேலும் இரண்டுரக்அத்கள் தொழுதார்கள்இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்இரண்டுரக்அத்கள் தொழுதார்கள்மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்பின்பு வித்ரு தொழுதார்கள்பின்னர் பாங்குசொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள்பிறகு எழுந்து சுருக்கமாக இரு ரக்அத்கள் தொழுது விட்டு சுப்ஹுத்தொழுகைக்காக (வீட்டை விட்டுவெளியே சென்றார்கள்.
அறிவிப்பவர்இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்புகாரீ 183, முஸ்லிம் 1275
நபி (ஸல்அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர்இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்புகாரீ 1138, முஸ்லிம் 1276
10+1 ரக்அத்கள்
நபி (ஸல்அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள்அவற்றில் ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள்.தொழுது முடித்த பின் (தம்மை அழைப்பதற்காகதொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும் வரை வலப்பக்கம் சாய்ந்துபடுத்திருப்பார்கள். (அவர்வந்ததும் (எழுந்துசுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஸுப்ஹுடைய சுன்னத்)தொழுவார்கள்.
அறிவிப்பவர்ஆயிஷா (ரலி)
நூல்முஸ்லிம் 1339
8+5 ரக்அத்கள்
நபி (ஸல்அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள்அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள்(ந்தஐந்து ரக்அத்)தில்  கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள்.
அறிவிப்பவர்ஆயிஷா (ரலி)
நூல்முஸ்லிம் 1341
ரக்அத்கள்
நபி (ஸல்அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலிஅவர்களிடம் கேட்டேன்அதற்கவர்கள், "ஃபஜ்ருடையஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்ஏழுரக்அத்கள் (நபி (ஸல்அவர்கள் தொழுவார்கள்)'' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்மஸ்ரூக்
நூல்புகாரீ 1139
ரக்அத்கள்
நபி (ஸல்அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலிஅவர்களிடம் கேட்டேன்அதற்கவர்கள், "ஃபஜ்ருடையஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்ஏழுரக்அத்கள் (நபி (ஸல்அவர்கள் தொழுவார்கள்)'' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்மஸ்ரூக்
நூல்புகாரீ 1139
ரக்அத்கள்
"வித்ரு தொழுகை அவசியமானதாகும்யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்யார் நாடுகிறாரோஅவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்யார் நாடுகிறாரோ  அவர் ஒரு ரக்அத் தொழட்டும்'' என்று நபி (ஸல்அவர்கள்கூறினார்கள்.
அறிவிப்பவர்அபூஅய்யூப் (ரலி)
நூல்கள்நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180
ரக்அத்கள்
"வித்ரு தொழுகை அவசியமானதாகும்யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்யார் நாடுகிறாரோஅவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்யார் நாடுகிறாரோ  அவர் ஒரு ரக்அத் தொழட்டும்'' என்று நபி (ஸல்அவர்கள்கூறினார்கள்.
அறிவிப்பவர்அபூஅய்யூப் (ரலி)
நூல்கள்நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180
ரக்அத்
"வித்ரு தொழுகை அவசியமானதாகும்யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்யார் நாடுகிறாரோஅவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்யார் நாடுகிறாரோ  அவர் ஒரு ரக்அத் தொழட்டும்'' என்று நபி (ஸல்அவர்கள்கூறினார்கள்.
அறிவிப்பவர்அபூஅய்யூப் (ரலி)
நூல்கள்நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180
வித்ர் தொழும் முறை
நபி (ஸல்அவர்கள் ஐந்து அல்லது ஏழு ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள்அவற்றிக்கிடையே ஸலாமைக் கொண்டோஅல்லது பேச்சைக் கொண்டோ பிரிக்க மாட்டார்கள்.
அறிவிப்பவர்உம்மு ஸலமா (ரலி)
நூல்கள்நஸயீ 1695, இப்னுமாஜா 1182, அஹ்மத் 25281
நபி (ஸல்அவர்கள் ஐந்து ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள்அதன் கடைசியில் தவிர மற்ற ரக்அத்களில் அமரமாட்டார்கள்.
அறிவிப்பவர்ஆயிஷா (ரலி)
நூல்நஸயீ 1698
நபி (ஸல்அவர்களுக்கு உடல் கனத்த போது ஏழு ரக்அத்கள் தொழுதார்கள்அதில் அதன் கடைசி ரக்அத்தில் தவிரமற்ற ரக்அத்துகளில் உட்காரவில்லை.
அறிவிப்பவர்ஆயிஷா (ரலி)
நூல்நஸயீ 1699
...நபி (ஸல்அவர்கள வயதாகி பலவீனம் அடைந்த போது ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுதார்கள்அதில் ஆறாவதுரக்அத்தில் தவிர மற்ற ரக்அத்களில் உட்காரவில்லைபின்னர் எழுவார்கள்ஸலாம் கொடுக்க மாட்டார்கள்பின்னர்ஏழாவது ரக்அத்தை தொழுவார்கள்பின்னர் ஸலாம் கூறுவார்கள்பின்னர் இரண்டு ரக்அத்கள் அமர்ந்துதொழுவார்கள்.
அறிவிப்பவர்ஆயிஷா (ரலி)
நூல்நஸயீ 1700
இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுதல்
இரவுத் தொழுகையை ஜமாஅத்தாக தொழுது கொள்வதற்கும் நபிமொழிகளில் ஆதாரம் உள்ளது.
ஆயிஷா (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்நபி (ஸல்அவர்கள் தமது அறையில் தொழுபவர்களாக இருந்தனர்.அவர்களின் தலையை மக்கள் பார்க்கும் அளவிற்கு அந்த அறையின் சுவர் குட்டையாக இருந்ததுமக்கள் அவர்களைப்பின்பற்றி தொழலானார்கள்மறுநாள் காலையில் மக்கள் இது பற்றி பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்இரண்டாம் நாளில்நபி (ஸல்அவர்கள் தொழுதபோது மக்களும் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள்இவ்வாறு இரண்டு மூன்றுஇரவுகள் செய்யலானார்கள்அதன் பின் நபி(ஸல்அவர்கள் (தொழவராமல் உட்கார்ந்து விட்டார்கள்காலையில்மக்கள் இது பற்றிப் பேசிக் கொள்ளலானார்கள். "இரவுத் தொழுகை உங்கள் மீது கடமையாக்கப்பட்டு விடுமோ என்றுநான் அஞ்சினேன். (அதனாலேயே வரவில்லைஎன்று கூறினார்கள்.
நூல்புகாரி (729)
ஆயிஷா (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்நபி (ஸல்அவர்கள் நள்ளிரவில் பள்ளிக்குச் சென்று தொழுதார்கள்.அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள்விடிந்ததும் மக்கள் இது பற்றிப் பேசிக் கொண்டார்கள். (மறுநாள்)முதல் நாளை விட அதிகமான மக்கள் திரண்டு நபி (ஸல்அவர்கள் பின்னால் நின்று தொழுதார்கள்விடிந்ததும் மக்கள்இது பற்றிப் பேசிக் கொண்டார்கள்இந்த மூன்றாம் இரவில் பள்ளிவாசலுக்கு நிறையப் பேர் வந்தனர்நபி (ஸல்)பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார்கள்அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர்நான்காம் இரவில் பள்ளிவாசல்கொள்ளாத அளவிற்கு மக்கள் திரண்டனர்ஆனால் நபி (ஸல்அவர்கள் சுபுஹுத் தொழுகைக்குத் தான் வந்தனர்.ஸுப்ஹுத் தொழுகை முடித்ததும் மக்களை நோக்கி தஷஹ்ஹுத் மொழிந்து "நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்துகூறுகிறேன்நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லைஎனினும் இது உங்கள் மீது கடமையாக்கப்பட்டு அதைஉங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடும் என்று நான் அஞ்சினேன்'' எனக் கூறினார்கள்நிலைமை இப்படிஇருக்க (ரமலானின் இரவுத் தொழுகையை மக்கள் தனித் தனியாகவே தொழுது கொண்டிருக்கநபி (ஸல்அவர்கள்மரணித்தார்கள்.
நூல்புகாரி (2012)
உமர் (ரலிஅவர்களுடன் நாங்கள் ஓர் இரவு ரமலானில் பள்ளிவாசலுக்குச் சென்றோம்மக்கள் பல்வேறு குழுக்களாகஇருந்தனர்சிலர் தனியாகவும் வேறு சிலர் கூட்டாகவும் தொழுது கொண்டிருந்தனர்உமர் (ரலிஅவர்கள் இவர்களைஒரே இமாமின் பின்னே தொழுமாறு ஏற்பாடு செய்வது நல்லது என்று எண்ணி அவ்வாறே செயல்படுத்தினார்கள்உபய்பின் கஅப் அவர்களை இமாமாக ஏற்பாடு செய்தார்கள்பின்பு மற்றோர் இரவு (பள்ளிக்குவந்த அவர்கள் மக்கள் ஒரேஇமாமைப் பின்பற்றி தொழுவதைக் கண்டார்கள். "இந்த புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறதுஇப்போது தொழுதுவிட்டுப் பிறகு உறங்குவதை விட உறங்கி விட்டு இரவின் இறுதியில் தொழுவது மிகவும் சிறந்ததாகும்'' எனவும்கூறினார்கள்
அறிவிப்பவர்அப்துர் ரஹ்மான்
நூல்புகாரி (2010)
இப்னு அப்பாஸ் (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்எனது சிறிய தாயாரும் நபி (ஸல்அவர்களின் மனைவியுமானமைமூனா பின்துல் ஹாரிஸ் (ரலிஅவர்களின் வீட்டில் நபி (ஸல்அவர்கள் தங்கியிருந்து இரவில் நானும்தங்கியிருந்தேன்நபி (ஸல்அவர்கள் (பள்ளியில்இஷா தொழுகை நடத்தி விட்டுப் பின்னர் தமது வீட்டிற்கு வந்துநான்கு ரக்அத்துகள் தொழுது விட்டு உறங்கினார்கள்பின்னர் எழுந்து "சின்னப் பையன் தூங்கி விட்டானோ?'' என்றுஅல்லது அது போன்ற ஒரு வார்த்தையைச் சொல்லி விசாரித்து விட்டு மீண்டும் தொழுகைக்காக நின்று விட்டார்கள்.நானும் (அவர்களுடன்அவர்களது இடப் பக்கமாகப் போய் நின்று கொண்டேன்உடனே என்னை அவர்களின் வலதுபக்கத்தில் இழுத்து நிறுத்தி விட்டு (முதலில்ஐந்து ரக்அத்துகளும் பின்னர் இரண்டு ரக்அத்துகளும் தொழுது விட்டுஅவர்களின் குறட்டை ஒலியை நான் கேட்குமளவிற்கு ஆழ்ந்து உறங்கிவிட்டார்கள்பிறது சுபுஹுத் தொழுகைக்குபுறப்பட்டார்கள்.
நூல்புகாரி (117)
அபூதர் (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்நாங்கள் நபி (ஸல்அவர்களுடன் நோன்பு நோற்றோம். (கடைசிஏழுநாட்கள் எஞ்சியிருக்கின்றவரை நபி (ஸல்அவர்கள் அம்மாதத்தில் எதையும் தொழ வைக்கவில்லை. (அந்நாளில்)இரவில் ஒரு பகுதி செல்லும் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்ஆறு (நாட்கள்)இருக்கும் போதுஎங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. (மாதம் முடியஐந்து நாள் இருக்கும் போது இரவின் பாதிவரை எங்களுக்குத்தொழுகை நடத்தினார்கள். "அல்லாஹ்வின் தூதரேஇந்த இரவு (முழுவதும்நீங்கள் எங்களுக்கு உபரியாகத்தொழுகை நடத்தக் கூடாதா?'' என்று நாங்கள் கேட்டோம்அதற்கு நபியவர்கள் "ஒரு மனிதர் இமாம் (தொழுகைநடத்திமுடிக்கின்ற வரை அவருடன் தொழுதால் அவருக்கு இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மைகணக்கிடப்படுகிறது'' என்று கூறினார்கள். (மாதம் முடியநான்கு நாள் இருந்த போது எங்களுக்கு அவர்கள் தொழவைக்கவில்லை. (மாதம் முடியமூன்று நாள் இருந்த போது தம்முடைய குடும்பத்தார்களையும் மனைவிமார்களையும்ஒன்றிணைத்து எங்களுக்கு ஸஹர் (நேரம்தவறிவிடுமோ என்று நாங்கள் அஞ்சும் அளவிற்கு எங்களுக்கு தொழுகைநடத்தினார்கள்பிறகு மாதத்தின் மீதமுள்ள நாட்களில் அவர்கள் தொழுகை நடத்தவில்லை.
நூல்அபூ தாவூத் (1167)
நாங்கள் நபி (ஸல்அவர்களுடன் இருபத்தி மூன்றாவது நோன்பினுடைய இரவுப் பகுதியில் இரவின் முதல் பகுதியில்மூன்றில் ஒரு பகுதி வரை தொழுதோம்பிறகு இருபத்தைந்தாம் இரவில் அவர்களுடன் பாதி இரவு வரை தொழுதோம்.பிறகு இருபத்து ஏழாம் இரவில் அவர்களுடன் நாங்கள் ஸஹர் (உணவைஅடைய முடியாதோ என்று எண்ணும்அளவிற்குத் தொழுதோம்.
அறிவிப்பவர்நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்நஸயி (1588)
வீட்டில் தொழுவதே மிகச்சிறந்தது
நபி (ஸல்அவர்கள் ரமலான் மாதத்தில் பாயினால் ஒரு அறையை அமைத்துக் கொண்டார்கள்சில இரவுகள் அதனுள்தொழுதார்கள்அவர்களது தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள்இதைப் பற்றி அறிந்து நபி(ஸல்அவர்கள் (அந்த அறைக்கு வராமல்உட்கார்ந்து விட்டார்கள்பின்பு மக்களை நோக்கி வந்து "உங்களதுசெயல்களை நான் கண்டேன்மக்களே உங்களது இல்லங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்கடமையானதொழுகை தவிர மற்ற தொழுகைகளைத் தமது வீட்டில் தொழுவதே சிறப்பாகும்'' என்று கூறினார்கள்
அறிவிப்பவர்ஸைத் பின் ஸாபித் (ரலி)
நூல்புகாரி (731)
இரவுத் தொழுகை தவறி விட்டால்...
ஆயிஷா (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்நபி (ஸல்அவர்களுக்கு நோய் முதலியவற்றால் இரவுத் தொழுகை தவறிவிட்டால் (அதற்கு ஈடாகப்பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
நூல்முஸ்லிம் (1358)
http://www.onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/vithru_sattam_enna/#.U7BTYxYWm6c