புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

அரபு மொழி பயிற்சி


அரபு மொழி பயிற்சி
ஆசிரியர் : பி.ஜைனுல் ஆபிதீன்
திருக்குர்ஆனை எளிதில் ஓதுவதற்காக நடத்தப்பட்ட சிறப்பு அரபு மொழி பயிற்சி

குரானைத் தொட்டு முத்தமிடலாமா?


திருமறைக் குர்ஆனைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் பலர் குர்ஆனைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அப்படி முத்தமிடுவதை ஒரு வணக்கமாகக் கூட நினைக்கிறார்கள். குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்ற காரணத்தினால் தான் குர்ஆன் மகத்துவம் அடைகிறது..

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை


மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)


நபி வழி தொழுகை வீடியோ தொழுகை மற்றும் உளு செய்யும் முறை செயல் முறை - கோவை ரஹ்மத்துல்லாஹ் வீடியோ - TNT...

தொழுகை முறை


'நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் - ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 812

FRTJ ஃபிரெஞ்சு


vendredi 29 avril 2011

மத்திய கிழக்குப் புரட்சிகளும், காரணங்களும் ஓர் வரலாற்றுக் கண்ணோட்டம்.




தவரைத் திருத்திக் கொள்கிறோம்.
இங்கு வெளியிடப்பட்டுள்ள மத்திய கிழக்குப் புரட்சிகளும், காரணங்களும் ஓர் வரலாற்றுக் கண்ணோட்டம்.என்ற உரையில் பஹ்ரைன் என்பதற்குப் பதிலாக சில இடங்களில் கத்தர் என்று நாம் பயன்படுத்தியுள்ளோம். கத்தர் என்பதற்கு பதிலாக பஹ்ரைன் என்று புரிந்து கொள்ளும்படி வாசகர்களை வேண்டிக் கொள்கிறோம்.

உரை : ரஸ்மின் MISc

mercredi 27 avril 2011

சாய்பாபாவுக்கு இரங்கல் தெரிவித்த ஜவாஹிருல்லாஹ்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை
இந்து சமய ஆன்மீக குருவான சாய்பாபாவின் மறைவுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது..
நீங்கள் மேல் காணும் செய்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.முழுமையாக பார்க்க


சாய் பாபா என்பவர் பல சமூக சேவைகளை செய்தார் என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.மாற்று மதத்தை சார்ந்தவர் இறந்துவிட்டால் அவருக்காக இரங்கல் தெரிவிப்பதும் எந்த விதத்திலும் தவறில்லை ஏனெனில் ஒரு யூதருடைய ஜனாஸா கொண்டு செல்லும்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எழுந்து நின்றிருக்கிறார்கள் அதுமட்டுமல்லாமல் நோய் வாய்ப்பட்டவர் எந்த மதத்தை சார்ந்தவராயினும் அவரை போய் பார்த்து விசாரித்து இருக்கிறார்கள்.எனவே மாற்று மதத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பது தவறு இல்லை.ஆனால் இந்த சாய் பாபா என்பவர் யார் ? தன்னை கடவுள் என்றும் தன்னை வழிப்படுங்கள் என்று சொன்னவர். இப்படிப்பட்ட்வருக்கும் இவரை கடவுள் என்று நம்பி இருக்கக் கூடியவர்களுக்கும் அனுதாபம் தெரிவிப்பது அவர்களின் இணைக்கற்பிப்பை ஆதரிப்பதாகவே இருக்கிறது.ஃபிர்அவனுடைய செயலை செய்தவருக்கும் அவருடைய பக்தர்களுக்கும் ஆதரவாக குரல் கொடுப்பது எந்த வகையிலும் ஞயாயம் இல்லை.

mardi 26 avril 2011

பிரான்ஸ் ஹிஜாபை தடை செய்யவில்லை. முஸ்லீம்கள் புரிய வேண்டிய சரியான கோணம்.

கடந்த சில நாட்களாக முஸ்லீம்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் செய்திகளில் ஒன்றாக ஹிஜாபும் மாறியிருக்கிறது. பிரான்ஸ் அரசாங்கம் அந்நாட்டுப் பெண்கள் அணியும் ஆடையில் சில வகையான ஆடைகளை தடை செய்ததே இதற்கான காரணமாகும்.

கடந்த ஏப்ரல் 11 திங்கட்கிழமை அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தினால் பிரான்ஸில் சில இடங்களில் போராட்டங்களும் நடத்தப்பட்டது.

பெரும்பாலான முஸ்லீம்கள் பிரான்ஸ் அரசு தடை செய்த ஆடை எது அவா்கள் தடை செய்யது மார்க்க அடிப்படையில் நியாமானதா? இல்லையா என்பதை சரியாக அறியாமல் இருக்கிறார்கள்.

இன்னும் சிலரோ பெண்கள் அணியும் ஹிஜாபையே பிரான்ஸ் தடை செய்துவிட்டதாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் முதலாவதாக பிரான்ஸ் அரசு எந்த வகையிலான ஆடைகளை பெண்களுக்கு தடை செய்துள்ளது என்பதைப் புரிந்து கொண்டால் மார்க்கத்தின் தெளிவை சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.

மண்ணறை வாழ்வை நாசப்படுத்தும், கல்லறை வழிபாடு.


வீடியோவை பார்க்க புகைப்படத்தை
சொடுக்கவும்
சிந்திக்கும் சமுதாயம் ! முதிர்ந்த அறிவு பெற்ற சமுதாயம் ! சிறந்த இறைத்தூதைப் பெற்ற சமுதாயம் !

உலகின் சிறந்த வழிகாட்டியான இஸ்லாத்திற்கு சொந்தம் கொண்டாடும் ஒரே சமுதாயம் ! என்றெல்லாம் பல வகையான பெயர்களையும், பெருமைகளையும் தன்னகத்தே கொண்டவர்கள் தான் முஸ்லீம்கள் என்று உலகம் முழுவதும் பேசப்படுகிறார்கள்.

உண்மையில் மேலே சொன்ன எந்த வர்ணனையும் பொய்யானது அல்ல. இட்டுக் கட்டப்பட்டதும் அல்ல. சுய இலாபத்திற்காக சேர்த்துக் கொள்ளப்பட்டதும் அல்ல. முஸ்லீம்கள் என்றால் மேலே சொன்ன அனைத்து செயல்பாடுகளும் உரிமை கொண்டாட தகுதி பெற்றவர்கள் தான்.

ஆனால் இன்றைய முஸ்லீம்கள் அதற்குத் தகுதியானவர்களா என்று பார்க்கும் போது கேள்விக் குறிதான் நம் கண்முன் நிற்கிறது.

அல்லாஹ்வை வணங்க வேண்டிய சமுதாயம், அவ்லியாக்களை (?) வணங்குகிறது.

lundi 25 avril 2011

சுத்ரா - தடுப்பு

தொழுபவருக்கு குறுக்கே செல்வது பாவமாகும். மேலும் இதனால் தொழுபவரின் கவனம் சிதறுகின்றது. இதைத் தவிர்ப்பதற்காக தனியாகத் தொழுபவரும் தனக்கு முன் தடுப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

'சுத்ராவை (தடுப்பை) நோக்கியே தவிர நீங்கள் தொழாதீர்கள்! உங்களுக்கு முன்னால் யாரையும் நடக்க விடாதீர்கள்! மீறினால் அவருடன் சண்டையிடுங்கள்! அவருடன் ஷைத்தான் இருக்கிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: இப்னுஹுஸைமா 800, இப்னுஹிப்பான்2362, ஹாகிம் 921, பைஹகீ 3261

770 عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ عَنْ أَبِيهِ قَالَ كُنَّا نُصَلِّي وَالدَّوَابُّ تَمُرُّ بَيْنَ أَيْدِينَا فَذَكَرْنَا ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مِثْلُ مُؤْخِرَةِ الرَّحْلِ تَكُونُ بَيْنَ يَدَيْ أَحَدِكُمْ ثُمَّ لَا يَضُرُّهُ مَا مَرَّ بَيْنَ يَدَيْهِ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்களில் ஒருவர் (தொழும் போது) தமக்கு முன்னால் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றதை (தடுப்பாக) வைத்துக் கொண்டு தொழட்டும். அந்தக் கட்டைக்கு அப்பால் கடந்து செல்பவரை அவர் பொருட்படுத்த வேண்டாம்.
அறிவிப்பவர் : தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி)
நூல் : முஸ்லிம் (858)

dimanche 24 avril 2011

முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு

17.04.2011 அன்று டெல்லியில் நடந்த INSTITUTE OF OBJECTIVE STUDIES என்ற கருத்தரங்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு பேசும் பொழுது “இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும். இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும், இந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும், கஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும் பல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன. ஆனால், உண்மை எதுவெனில்,மைசூர் மன்னன் மாவீரன் திப்பு சுல்தான் 153 கோயில்களுக்கு மானியம் கொடுத்துள்ளார்.மேலும் சமஸ்கிருதம்- உருது மொழி இணைந்த இந்திய கலாச்சாரத்திற்கு அடிக்கல் நாட்டினார்.ஆனால் அதனை மறைக்க முகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி என்று கூறினார்.” தன்னுடைய இந்த உரைக்கு ஆதாரமாக வரலாற்று ஆசிரியர் B.N.பாண்டே எழுதிய “History in the Service of Imperialism” வரலாற்று நூலை மேற்கோள் காட்டி உள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பேச்சு உச்ச நீதி மன்றத்திலும் வெளிப்படவேண்டும். ராமர் கோயிலை இடித்து தான் பாபர், பள்ளிவாசல் கட்டினார் என்ற வாரலாற்று திரிப்பை உடைக்க மார்கண்டேய கட்ஜு முன்வரவேண்டும். அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் அயோக்கிய தீர்ப்பை ரத்து செய்து, உச்ச நீதி மன்ற தானாக இவ்வழக்கை மறுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பதே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கோரிக்கை. இக்கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி-27 அன்று சென்னையிலும் மதுரையிலும் பல லட்சக்கணக்கான மக்களை திரட்டி TNTJ பேரணி மற்றும் கண்டன ஆர்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

அஜ்மல், கோவை
நன்றி : TNTJ.NET

vendredi 22 avril 2011

மணம் விரும்பி மகளுக்குக் கொடுத்த அன்பளிப்பு வரதட்சனையாகுமா?


வீடியோவை பார்க்க புகைப்படத்தை
சொடுக்கவும்
வரதட்சணைன் என்று நேரடியாகச் சொல்லித் தந்தால தான் வரதட்சணை என்று பலரும் நினைக்கின்றனர். சீர்வரிசைகளைக் கேட்காவிட்டாலும் அதைக் கொடுக்காவிட்டால் நம் மகளைச் சரியாக நடத்த மாட்டார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவே கொடுக்கப்படுகின்றன. திருமணம் நடப்பதற்கு முன் அல்லது திருமணத்தின் போது கேட்காமல் கொடுத்தாலும் அதுவும் கேட்டது போல் தான். 

பின்வரும் ஹதீஸைப் பாருங்கள்!

அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தாரின் ஸகாத்களை வசூலிக்கும் அதிகாரியாக இப்னுல் லுத்பிய்யா என்றழைக்கப்பட்ட ஒருவரை நியமித்தார்கள். அவர் (ஸகாத் வசூலித்துக் கொண்டு) வந்த போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள் கணக்குக் கேட்டார்கள். அவர், இது உங்களுக்குரியது; இது (எனக்கு) அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீர் சொல்வது உண்மையானால் உம் தந்தை வீட்டில், அல்லது தாய் வீட்டில் உட்கார்ந்திரும்! உம்மிடம் அன்பளிப்புகள் வருகின்றனவா பார்ப்போம்எ ன்று கூறினார்கள். பிறகு எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, அல்லாஹ் என்னைப் பொறுப்பாளியாக்கிய ஒரு பணிக்காக உங்களில் ஒருவரை நான் அதிகாரியாக்க, அவர் சென்றுவிட்டு வந்து இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது' என்று சொல்கிறார். அவர் தம் தகப்பன் வீட்டில், அல்லது தாய் வீட்டில் உட்கார்ந்திருந்தால் அவருக்கு அந்த அன்பளிப்புகள் வந்து சேருமா? அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் எவரும் உரிமையின்றி (முறைகேடாக) எந்த ஒன்றை அடைந்து கொண்டாலும் மறுமை நாளில் அதை (தமது தோளில்) சுமந்த வண்ணமே அல்லாஹ்வை அவர் சந்திப்பார். இந்த வகையில் கனைத்துக் கொண்டிருக்கும் ஒட்டகத்தையோ, அல்லது கத்திக் கொண்டிருக்கும் பசுவையோ ஆட்டையோ (தமது தோளில்) சுமந்து கொண்டு அல்லாஹ்வைச் சந்திக்கும் எவரையும் நான் உறுதியாக அறிவேன்என்று கூறினார்கள். பிறகு, தமது அக்குளின் வெண்மை தெரியும் அளவிற்குத் தம் இரு கைகளையும் உயர்த்தி, இறைவா! (உன் கட்டளையை) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? என்று நபியவர்கள் கூறியதை என் கண்ணால் கண்டேன்; என் காதால் கேட்டேன்.

புஹாரி 6979

அந்த நபருக்கு அன்பளிப்பாகத் தான் அது வழங்கப்பட்டது. ஆனாலும் ஜகாத் வசூலிக்கச் சென்றதால் தான் அவருக்கு வழங்கப்பட்டது என்பதால் அதை அன்பளிப்பாக நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அங்கீகரிக்கவில்லை. இதைச் சிந்தித்தால் வரதட்சணையில் எவை சேரும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

குஜராத் கலவரம்: "துணைநின்றார் மோடி"


குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி, கடந்த 2002-ம் ஆண்டு நடந்த மதக்கலவரத்துக்கு துணை நின்றதாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சஞ்சீவ் பட் என்ற அந்த அதிகாரி, கோத்ரா கலவரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட எஸ்.ஐ.டி. எனப்படும் சிறப்புப் புலனாய்வுக் குழு மீது நம்பிக்கையில்லாத காரணத்தால்தான் தான் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோத்ராவில் நடந்த கலவரம் தொடர்பாக முதலமைச்சர் மோடியின் வீட்டில் நடந்த கூட்டத்தில், உளவுத்துறை அதிகாரி என்ற முறையில் தானும் கலந்துகொண்டதாக சஞ்சீவ் பட் கூறியுள்ளார்.

குஜராத்தில் மதக்கலவரங்களைக் கையாள்வதைப் பொறுத்தவரை, குஜராத் போலீசார் நடுநிலையோடு செயல்பட்டு வருகிறார்கள். இந்த முறை முஸ்லிம்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என்று போலீஸ் அதிகாரிகளிடம் நரேந்திர மோடி அறிவுறுத்தியதாக சஞ்சீவ் பட் தனது மனுவில் புகார் கூறியுள்ளார்.

நரேந்திர மோடி-குஜராத் கலவரம் தொடர்பு அம்பலம்: உச்சநீதி மன்றத்தில் உளவுத்துறை தகவல்!

புதுடெல்லி: கடந்த 2002-ம் ஆண்டு, குஜராத் கலவரம் நடந்த போது அங்கு மூத்த ஐ.பி.எஸ். காவல் துறை அதிகாரியாக இருந்த சஞ்சீவ் பகத் தற்போது உளவுத்துறையில் பணியாற்றுகிறார்.
அவர் உச்சநீதி மன்றத்தில் குஜராத் கலவரம் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

குஜராத் கலவரத்துக்கும், முதலமைச்சர் நரேந்திர மோடிக்கும் தொடர்பு உண்டு. அவர் அப்போது கலவரக் கும்பலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று முதலமைச்சர் நரேந்திர மோடி காவல்துறைக்கு உத்தரவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பகத் மனு தாக்கல் செய்துள்ளார்.

கலவரம் நடந்த போது நான் அங்கு பணியாற்றினேன். உச்சநீதி மன்றம் அமைத்துள்ள புலனாய்வு குழுவினரிடம் நான் இதை தெரிவித்தேன். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. எனவே நான் தனியாக உச்சநீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கிறேன்.

mardi 19 avril 2011

விவாதிப்பது ஹராமா ? ஸில்மியின் ஸில்மிசத்திற்கு பதில். ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணலாம்!


அன்பின் சகோதரர்களே ! சத்தியத்தை தயங்காமல் எத்திவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமலும், இறைவனுக்கு மாத்திரமே அஞ்சியும் நாம் செயல்படுத்தி வருகிறோம் அல்ஹம்துலில்லாஹ்.

இந்தச் சந்தர்ப்பத்தில் தங்களை மார்க்க அறிஞர்களாக மக்கள் மத்தியில் இனம் காட்டி தங்களின் பெயர்களை நீர் கொழும்பில் இருந்து யாழ்ப்பானம் வரை எழுதி வைத்துக் கொள்ளும் யஹ்யா சில்மி போன்றவர்கள் மார்க்கத்திற்கு விரோதமான ஸலப் கொள்ளை என்ற ஒரு புதிய வழிகெட்ட கொள்கையை பரப்ப முற்படுவதும் அதற்கெதிராக இறைவனின் உதவியால் குா்ஆன் சுன்னா அடிப்படையில் நாம் விளக்கம் சொல்லி வருவத ும் வாசகர்கள் அறிந்த ஒன்றுதான்.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஸலபுக் கொள்கை என்ற பெயரில் குா்ஆனையும், நபியவர்களின் வழிகாட்டுதலையும் விட்டும் விலகி, ஸஹாபாக்களின் சொல் செயல்பாடுகளும் மார்க்கமாக மாறும் என்ற கொள்கையை மக்கள் மத்தியில் பரப்ப முயலும் சில்மி போன்றவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களுக்கெல்லாம் தொடராக நாம் பதில் கொடுத்து வந்தோம்.

அந்த பதில்களில் ஒன்றுக்குக் கூட குா்ஆன், சுன்னா அடிப்படையில் மறுப்புத்தர வக்கற்ற ஸ(க)லபிக் கும்பல் மீண்டும் மீண்டும் அரைத்த மாவையே அரைக்க ஆரம்பித்துள்ளது.

samedi 16 avril 2011

பதவி ஓர் அமானிதம்


பதவி என்றால் என்ன, இஸ்லாம் பதவியை பற்றி என்ன கூறுகிறது என்பதைப் பற்றிய அறிவில்லாத காரணத்தினாலும் புகழுக்காகவும் பணத்துக்காகவும் எதையும் செய்யலாம் என்ற சுயநலத்தினாலும் இஸ்லாத்தையே மறந்து வாழக் கூடிய முஸ்லிம்களை நாம் இன்று  பார்த்து வருகிறோம்.பதவிக்காக தம்முடைய மானத்தை இழந்து ,நம்பகத் தன்மையை இழந்து, கடைசியில் இஸ்லாத்தையே மறந்து இணைவைப்பில் விழக் கூடிய நிலையையும் நாம் பார்க்காமல் இல்லை. அல்லாஹ் நமக்கு திருக்குர்ஆன் மூலமாகவும்  நபி(ஸல்) அவர்களுடைய வாழ்கையின் மூலமாகவும் நாம் எப்படி வாழ்ந்தால் இவ்வுலகிலும் மறுமையிலும் வெற்றிபெற முடியும் என்பதை ஒவ்வொரு விஷயத்திலும் தெளிவாக கூறியிருக்கிறான்.இஸ்லாம் போதிக்கும் விதத்தில் நாம் பதவியை எடுத்துக் கொள்ளாவிட்டால் அதனால் நிச்சயம் நாம் நஷ்டம் அடைந்தவர்களாகிவிடுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல் அஹ்ஜாப் -21)
நமக்கு ஒரு பதவி கிடைக்கிறது என்றால் அது நம்முடைய திறமையால் கிடைத்தது இல்லை மாறாக அது அல்லாஹ்வின் நாட்டம்,சோதனை,உதவி என்றே ஒரு முஸ்லிம் நம்ப வேண்டும்.மேலும் மார்க்கத்தை எத்திவைக்கும் தாவா பணியாகட்டும் ஏனைய சமுதாயப் பணியாகட்டும் நாம்  அதற்காக செயல்படும் ஒரு கருவியேயாகும் என்பதையும் அல்லாஹ்வின் ஏவல்களை செய்யும் ஒரு அடிமையாகவே எண்ணி செயல்பட வேண்டும்.

நம்மிடம் அல்லாஹ் அளித்ததை தவிர வேறு எந்த சொந்த ஞானமும் நமக்கில்லை என்பதையும் மறந்துவிட கூடாது.நமக்கு கிடைக்கும் பதவியை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே மறுமையில் அதன் கூலி நிர்ணயிக்கப் படுகிறது.பதவியில் உள்ள  ஒரு முஸ்லிம் மறுமையிலும் இம்மையிலும் வெற்றி பெற எப்படி  நடந்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அந்த பதவியை தவறாக பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் விளைவுகளையும் தொடர்ந்து பார்ப்போம்.

mercredi 13 avril 2011

சபை ஒழுக்கங்கள்


இஸ்லாமிய மார்க்கம் மற்ற மதங்களை விடப் பல வகைகளில் சிறந்து விளங்குகிறது. இஸ்லாம் சிறந்து விளங்குவதற்குக் காரணம், அதன் கொள்கைகளும் அதில் உள்ள நல்ல அறிவுரைகளும் தான். 


மனிதன் பிறந்தது முதல் அவன் இறக்கும் வரை அவன் சந்திக்கும் அனைத்து விஷயங்களுக்கும் அழகிய முறையில் வழிகாட்டுகிறது. அந்த வகையில் மனிதன் சிறுநீர் கழிப்பதன் ஒழுங்குகளைக் கூட இந்த மார்க்கம் சொல்லித் தருகிறது.

ஸல்மான் அல் ஃபார்சீ (ரலி) அவர்களிடம், மல ஜலம் கழிக்கும் முறை உட்பட அனைத்தையுமே உங்கள் இறைத்தூதர் உங்களுக்குக் கற்றுத் தந்திருக்கிறார் (போலும்) என்று (பரிகாசத்துடன்) கேட்கப்பட்டது.

அதற்கு ஸல்மான் (ரலி) அவர்கள், ஆம் (உண்மை தான்); மல ஜலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்க வேண்டாமென்றும் (மல ஜலம் கழித்த பின்) வலக் கரத்தால் துப்புரவு செய்ய வேண்டாமென்றும், மூன்றை விடக் குறைவான கற்களால் துப்புரவு செய்ய வேண்டாமென்றும், கெட்டிச்சாணத்தாலோ எலும்பாலோ துப்புரவு செய்ய வேண்டாமென்றும் எங்களை (எங்கள் நபி) தடுத்தார்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஸல்மான் (ரலி), நூல்: முஸ்லிம் (437)


இவ்வாறு வீட்டிற்குச் செல்பவர்கள், சபைக்குச் செல்பவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் இஸ்லாம் வழிகாட்டியுள்ளது. அதன் விவரங்களைப் பார்ப்போம்.