புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

vendredi 22 avril 2011

நரேந்திர மோடி-குஜராத் கலவரம் தொடர்பு அம்பலம்: உச்சநீதி மன்றத்தில் உளவுத்துறை தகவல்!

புதுடெல்லி: கடந்த 2002-ம் ஆண்டு, குஜராத் கலவரம் நடந்த போது அங்கு மூத்த ஐ.பி.எஸ். காவல் துறை அதிகாரியாக இருந்த சஞ்சீவ் பகத் தற்போது உளவுத்துறையில் பணியாற்றுகிறார்.
அவர் உச்சநீதி மன்றத்தில் குஜராத் கலவரம் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

குஜராத் கலவரத்துக்கும், முதலமைச்சர் நரேந்திர மோடிக்கும் தொடர்பு உண்டு. அவர் அப்போது கலவரக் கும்பலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று முதலமைச்சர் நரேந்திர மோடி காவல்துறைக்கு உத்தரவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பகத் மனு தாக்கல் செய்துள்ளார்.

கலவரம் நடந்த போது நான் அங்கு பணியாற்றினேன். உச்சநீதி மன்றம் அமைத்துள்ள புலனாய்வு குழுவினரிடம் நான் இதை தெரிவித்தேன். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. எனவே நான் தனியாக உச்சநீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கிறேன்.