புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

அரபு மொழி பயிற்சி


அரபு மொழி பயிற்சி
ஆசிரியர் : பி.ஜைனுல் ஆபிதீன்
திருக்குர்ஆனை எளிதில் ஓதுவதற்காக நடத்தப்பட்ட சிறப்பு அரபு மொழி பயிற்சி

குரானைத் தொட்டு முத்தமிடலாமா?


திருமறைக் குர்ஆனைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் பலர் குர்ஆனைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அப்படி முத்தமிடுவதை ஒரு வணக்கமாகக் கூட நினைக்கிறார்கள். குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்ற காரணத்தினால் தான் குர்ஆன் மகத்துவம் அடைகிறது..

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை


மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)


நபி வழி தொழுகை வீடியோ தொழுகை மற்றும் உளு செய்யும் முறை செயல் முறை - கோவை ரஹ்மத்துல்லாஹ் வீடியோ - TNT...

தொழுகை முறை


'நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் - ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 812

FRTJ ஃபிரெஞ்சு


mercredi 31 juillet 2013

லைலதுல் கத்ர்


ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)
முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி (35)
லைலத்துல் கத்ரு எந்த நாள்?
லைலதுல் கத்ரு இரவில் இவ்வளவு சிறப்பை இறைவன் வைத்திருந்தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் தெரியாது. நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்ட அந்த இரவை அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காக மறக்கடித்துள்ளான். நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ரு இரவைப் பற்றி அறிவிப்பதற்காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது முஸ்லிம்களில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். “லைலதுல் கத்ரு இரவு பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு, இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயற்சி செய்யுங்கள்” என்றார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்கள்: புகாரி (49), முஅத்தா (615)
நபி (ஸல்) அவர்களுக்கே தெரியாது என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுவதால் அது குறிப்பிட்ட இந்த இரவு தான் என்று இவ்வுலகத்தில் எந்த மனிதனும் கூற முடியாது. எனினும் லைலதுல் கத்ர் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப் படை இரவான 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஆதாரப்பூர்மான செய்திகள் உள்ளன.
ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரி 2017, முஸ்லிம் 1997
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலதுல் கத்ரு இரவைப் பற்றிச் சொல்லும் போது, “அது ரமலான் மாதத்தில் தான் இருக்கிறது. எனவே அதை ரமலானில் கடைசிப் பத்தில் தேடுங்கள். அது ஒற்றைப்படை இரவான இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி மூன்று அல்லது இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஏழு அல்லது ரமலானின் கடைசி இரவில் (29) இருக்கும்” என்று சொல்லி விட்டு, “யார் அதில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்: அஹ்மத் (20700)
மேற்கூறிய ஹதீஸ்கள் ஐயத்திற்கு இடமின்றி லைலதுல் கத்ர், ரமலான் மாதத்தில் கடைசிப் பத்து இரவுகளில் 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான் இருக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

லைலதுல் கத்ர் 27வது இரவா?

லைலதுல் கத்ர் இரவு ரமலானின் கடைசிப் பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் ஒன்றாகத் தான் இருக்கும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நாம் பார்த்தோம். ஆனால் ஹதீஸ்களைக் காணாத பொதுமக்கள் லைலதுல் கத்ர் இரவு, ரமலான் 27வது இரவு தான் என்று முடிவு செய்து பெரிய விழாவாகக் கொண்டாகிறார்கள். இதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா? என்பதை நாம் பார்ப்போம்.
லைலதுல் கத்ரு இரவானது, இருபத்தேழாவது இரவாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா (ரலி), நூல்: அபூதாவூத் (1178)
இது போன்ற சில செய்திகளை அடிப்படையாக வைத்து சிலர் லைலத்துல் கத்ர் இரவு 27வது இரவு தான் என்று கூறுகின்றனர்.

இந்த ஹதீஸ் மட்டும் வந்திருந்தால் நாம் 27வது இரவு தான் என்று முடிவு செய்யலாம். ஆனால் இதற்கு மாற்றமாக நாம் முன்னர் குறிப்பிட்ட ஹதீஸில் லைலத்துல் கத்ர் இரவு என்பது நபி (ஸல்) அவர்களுக்கே மறக்கடிக்கப் பட்டுள்ளது என்று தெளிவாகக் குறிப்பிட்டு விட்டு, கடைசிப் பத்தின் ஒற்றை நாட்களில் அதை தேடிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். மேலும் 27 என்று குறிப்பிட்டுள்ளது போல் 23 என்றும் வந்துள்ளது. அவற்றை பாருங்கள்.
ரமலான் மாதத்தில் தேடக் கூடிய இரவான லைலத்துல் கத்ரைப் பற்றி நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 23வது இரவு என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி), நூல்: அஹ்மத் (15466)
இதைப் போன்று 21, 23, 25 என்று மூன்று இரவுகளை மட்டும் குறிப்பிட்டும் வந்துள்ளது.
“ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் லைலதுல் கத்ரை தேடுங்கள். லைலதுல் கத்ரை இருபத்தி ஒன்றாவது இரவில், இருபத்தி மூன்றாவது இரவில், இருபத்தி ஐந்தாவது இரவில் தேடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 2021
இதைப் போன்று 23, 29 இரவு என்று இரண்டு இரவுகளை மட்டும் குறிப்பிட்டும் வந்துள்ளது.
“லைலதுல் கத்ரு இரவு கடைசிப் பத்து நாட்களில் உள்ளது. அதை இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ தேடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 2022
இப்படிப் பல்வேறு அறிவிப்புகள் வருவதன் சரியான கருத்து என்ன? என்பதற்கு இமாம் ஷாஃபீ அவர்கள் தெளிவான விடையை கூறியுள்ளார்கள்.
இப்படிப் பலவாறாக நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கு விளக்கம் அளித்த இமாம் ஷாஃபி அவர்கள், “நபியவர்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்ப பதில் கூறும் வழக்கம் உள்ளவர்கள். இந்த இரவில் நாங்கள் லைலத்துல் கத்ரைத் தேடலாமா?’ என்று கேட்கும் போது அந்த இரவில் தேடுங்கள். என்று பதிலளித்திருப்பார்கள்” என்று கூறுகிறார்கள். (திர்மிதீ 722)
அதாவது ஒரு நபித்தோழர் 21வது இரவில் லைலத்துல் கத்ரை தேடலாமா? என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம், 21 வது இரவில் தேடுங்கள்’ என்று கூறியிருப்பார்கள். இன்னொரு நபித்தோழர் 23வது இரவில் கத்ரை தேடலாமா? என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம், 23வது இரவில் தேடுங்கள்’ என்று கூறியிருப்பார்கள். இவ்வாறு ஐந்து ஒற்றைப்படை இரவுகளைப் பற்றியும் கேட்டிருப்பார்கள். அதற்கு ஏற்றவாறு நபி (ஸல்) அவர்கள் பதிலளித்திருப்பார்கள். எனவே ஐந்து ஒற்றைப்படை இரவுகள் பற்றியும் ஹதீஸ்களில் இடம் பெற்று இருக்கிறது. இந்தக் கருத்தே மாறுபட்ட ஹதீஸ்கள் வந்திருப்பதன் சரியான விளக்கமாகத் தெரிகிறது.

- TNTJ.NET

லைலத்துல் கத்ர் இரவில் ஓத வேண்டிய பிரார்த்தனை


ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

'அல்லாஹ்வின் திருத்தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?' என்று நான் கேட்டேன். அதற்கு, 'அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபுஅன்னி' என்று சொல் என்று கூறினார்கள். (நூற்கள்: அஹ்மது, நஸயி, ஹாக்கிம், இப்னுமாஜா 3850, திர்மிதி 3580)

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ العَفْوَ فَاعْفُ عَنِّي

அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வஃப அஃபுஅன்னீ

பொருள்: 'இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!'

mardi 30 juillet 2013

நோன்பின் சட்டங்கள்

நோன்பின் சட்டங்கள்

  • பதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன்
  • தவறான வாதங்களும் தக்க பதில்களும் 1
  • உரை : பி.ஜைனுல் ஆபிதீன்



    lundi 29 juillet 2013

    நோன்பு திறக்கும் துஆ

    நோன்பு திறக்கும் துஆ மறு ஆய்வு தமிழகத்தில் நோன்பு துறக்கும் துஆவாக அல்லாஹும்ம லக்க சும்த்து... என்று துவங்கும் துஆவை ஓதி வருகிறார்கள். இவ்வாறு ஓதுவது விரும்பத்தக்கது என்று மத்ஹப் நூல்களில் கூறப்பட்டுள்ளது. அல்லாஹும்ம லக்க சும்த்து... என்ற துஆ பல்வேறு வாசகங்களில் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அபூஹுரைரா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அனஸ் (ரலி), அலீ (ரலி) ஆகிய நான்கு நபித்தோழர்கள் வழியாகவும் முஆத் பின் ஸஹ்ரா என்று ஒரு தாபியி வழியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவை அனைத்தும் பலவீனமான செய்திகளாகும். அல்லாஹும்ம லக்க சும்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து இந்த வாசகத்தை முஆத் பின் ஸஹ்ரா என்ற தாபியி அறிவிக்கும் செய்தி حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا هُشَيْمٌ عَنْ حُصَيْنٍ عَنْ مُعَاذِ بْنِ زُهْرَةَ أَنَّهُ بَلَغَهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَفْطَرَ قَالَ اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ அபூதாவூத் (2011), முஸனஃப் இப்னு அபீ ஷைபா பாகம்: 2, பக்கம்: 511, பைஹகீ பாகம்: 4, பக்கம்: 239, ஷுஅபுல் ஈமான்-பைஹகீ (3747), அத்தஃவாத்துல் கபீர்-பைஹகீ (426), அஸ்ஸுஹ்த் வர்ரகாயிக்-இப்னுல் முபாரக் (1388,1390), அஸ்ஸுனனுஸ் ஸகீர்-பைஹகீ (1102), பழாயிலுல் அவ்காத்-பைஹகீ (141), அல்மராஸில்-அபூதாவூத் (95) ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து நூல்களிலும் முஆத் பின் ஸஹ்ரா என்பவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதியதாக அறிவிக்கிறார். இவர் நபித்தோழர் அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான எந்தச் செய்தியாக இருந்தாலும் அதை நேரடியாகப் பார்த்து அல்லது கேட்டு அறிவித்தால் மட்டுமே அது ஏற்றுக் கொள்ளப்படும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாத ஒருவர் அறிவித்தால் அது பலவீனமான செய்தியாகும்.
     மேலும் இந்தச் செய்தியை அறிவிக்கும் முஆத் பின் ஸஹ்ரா என்பவரின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை. இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு எவரும் இவரைப் பற்றி குறிப்பிடவில்லை. யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவது இப்னு ஹிப்பான் அவர்கள் வழக்கம். எனவே இப்னு ஹிப்பான் மட்டும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவதை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்பதில்லை. எனவே முஆத் பின் ஸஹ்ரா என்பவர் யாரென அறியப்படாததால் இச்செய்தி மேலும் பலவீனமடைகிறது. அபூ ஹுரைரா (ரலி) வழியாக அறிவிக்கப்படும் இன்னொரு ஹதீஸ் முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா எனும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. مصنف ابن أبي شيبة - كتاب الصيام حدثنا محمد بن فضيل ، عن حصين ، عن أبي هريرة ، قال : كان النبي صلى الله عليه وسلم إذا صام ثم أفطر ، قال : اللهم لك صمت ، وعلى رزقك أفطرت முதல் அறிவிப்பாளராக முஹம்மத் பின் ஃபுலைல் என்பாரும் இரண்டாவது அறிவிப்பாளராக ஹுசைன் என்பாரும் மூன்றாவது அறிவிப்பாளராக அபூ ஹுரைரா (ரலி) அவர்களும் குறிப்பிடப்பட்டுள்ளனர். முதல் அறிவிப்பாளரான முஹம்மத் பின் ஃபுலைல் இரண்டாம் அறிவிப்பாளரான ஹுசைன் காலத்தில் வாழ்ந்தவர் அல்லர். இவர் ஹிஜ்ரி 295 ஆம் ஆண்டு மரணித்தார். ஹுசைன் ஹிஜ்ரி 136ல் மரணித்தார். இருவரது மரணத்துக்கும் இடையே 159 ஆண்டுகள் இடைவெளி உள்ளன. எனவே இருவரும் சம காலத்தில் வாழ்ந்திருக்க முடியாது. எனவே இந்த ஹதீஸும் பலவீனமானதாகும்.       லக்க சும்த்து வலா ரிஸ்க்கிக்க அஃப்தர்த்து வதகப்பல் மின்னீ இன்னக்கஸ் ஸமீவுல் அளீம் المعجم الكبير للطبراني - من اسمه عبد الله حدثنا محمد بن عبد الله الحضرمي ، ثنا يوسف بن قيس البغدادي ، ثنا عبد الملك بن هارون بن عنترة ، عن أبيه ، عن جده ، عن ابن عباس قال : كان النبي صلى الله عليه وسلم : إذا أفطر قال : لك صمت ، وعلى رزقك أفطرت فتقبل مني إنك أنت السميع العليم * இந்த வாசகம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மூலம் தப்ரானீயின் அல்முஃஜமுல் கபீர் பாகம்: 10, பக்கம்: 292ல் இடம் பெற்றுள்ளது. 
    இதில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் அப்துல் மலிக் பின் ஹாரூன் என்பவர் பலவீனமானவர் ஆவார். இவரைக் கடுமையாக ஹதீஸ் கலை அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர். இவரும் இவருடைய தந்தையும் பலவீனமானவர் என்று இமாம் தாரகுத்னீ அவர்களும், இவர் பொய்யர் என்று யஹ்யா பின் மயீன், அபூஹாத்தம் அவர்களும், ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கூறுபவர் என்று இப்னு ஹிப்பான் அவர்களும் கடுமையாக விமர்சனம் செய்த செய்தி ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களுக்குரிய லிஸானுல் மீஸான் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தச் செய்தியும் ஆதாரமற்றதாகி விடுகிறது. المعجم الأوسط للطبراني - باب العين حدثنا محمد بن إبراهيم ، ثنا إسماعيل بن عمرو البجلي ، نا داود بن الزبرقان ، نا شعبة ، عن ثابت البناني ، عن أنس بن مالك قال : كان النبي صلى الله عليه وسلم إذا أفطر قال : بسم الله ، اللهم لك صمت ، وعلى رزقك أفطرت لم يرو هذا الحديث عن شعبة إلا داود بن الزبرقان ، تفرد به : إسماعيل بن عمرو * பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம லக்க சும்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து இந்தச் செய்தி அனஸ் (ரலி) அவர்கள் மூலம் தப்ரானீ அவர்களுக்குரிய அல்முஃஜமுல் அவ்ஸத் பாகம்: 16, பக்கம்: 338லும், அல்முஃஜமுஸ் ஸகீர் பாகம்: 3, பக்கம்: 52லும், கிதாபுத் துஆ பாகம்: 2, பக்கம்: 488லும் அபூநுஐம் அவர்களுக்குரிய அஹ்பார் உஸ்பஹான் பாகம்: 9, பக்கம்: 141லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை இடம் பெற்றிருக்கும் அனைத்து நூல்களிலும் தாவூத் பின் ஸிப்ரிகான் என்பவர் இடம் பெற்றுள்ளார். ஜவ்ஸஜானீ அவர்கள், இவர் ஒரு பொய்யர் என்றும் ஹதீஸ் துறையில் விடப்பட்டவர்என்று யஃகூப் பின் ஷைபா, அபூ ஸுர்ஆ அவர்களும். இவர் நம்பகமானவர் இல்லை என்று இமாம் நஸயீ அவர்களும் பலவீனமானவர்என்று அபூதாவூத் அவர்களும் மேலும் பலரும் விமர்சனம் செய்துள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்) எனவே இந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல!   அல்லாஹும்ம லக்க சும்த்து வஅலைக்க தவக்கல்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து المطالب العالية للحافظ ابن حجر العسقلاني - كتاب السحور باب إجابة الدعاء عند الفطر - حديث : 1121;8191       وقال الحارث ، حدثنا عبد الرحيم بن واقد ، ثنا حماد بن عمرو ، عن السري بن خالد بن شداد ، عن جعفر بن محمد ، عن أبيه ، عن جده ، عن علي ، قال : قال لي رسول الله صلى الله عليه وسلم : يا علي ، إذا كنت صائما في شهر رمضان فقل بعد إفطارك : اللهم لك صمت ، وعليك توكلت ، وعلى رزقك أفطرت ، يكتب لك مثل من كان صائما من غير أن ينقص من أجورهم شيئا இந்த வாசகம் அலீ (ரலி) அவர்கள் மூலம் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களின் அல்மதாலிபுல் ஆலிய்யா பாகம்: 3, பக்கம்: 408லும், முஸ்னதுல் ஹாரிஸ் பாகம்: 2, பக்கம்: 256லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தியில் இடம் பெறும் ஆறாவது அறிவிப்பாளர் ஹம்மாத் பின் அம்ர் அந்நஸீபி என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டிச் சொல்லும் பொய்யர் என்று கடுமையாகக் குற்றம் சுமத்தப்பட்டவராவார். இவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர் என்று இமாம் புகாரீ அவர்களும், இவர் ஹதீஸ் துறையில் விடப்பட்டவர் என்று இமாம் நஸயீ அவர்களும், ஹதீஸ்களை இட்டுக் கட்டுபவர் என்று இமாம் இப்னு ஹிப்பான் அவர்களும், முற்றிலும் பலவீனமானவர் என்று இமாம் அபூஹாத்தம் அவர்களும், பொய்யர் என்றும் இட்டுக்கட்டிச் சொல்பவர் என்றும் பிரபலமானவர்களில் இவரும் ஒருவர் என்று இப்னு மயீன் அவர்களும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். (நூல்: லிஸானுல் மீஸான்) 
    இதைப் போன்று ஐந்தாவது அறிவிப்பாளர் அஸ்ஸரிய்யு பின் காலித் என்பவர் யாரென அறிப்படாதவர் என்று இமாம் தஹபீ தனது மீஸானுல் இஃதிதால்என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இந்தச் செய்தியும் பலவீனமடைகிறது. ஆக மொத்தத்தில் அல்லாஹும்ம லக்க சும்து ... எனத் தொடங்கும் எந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானதாக இல்லை. தஹபள்ளமவு... என்று ஆரம்பிக்கும் துஆ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தஹபள்ளமவு... என்று ஆரம்பிக்கும் இந்த துஆவை ஓதியதாக حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى أَبُو مُحَمَّدٍ حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ أَخْبَرَنِي الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ حَدَّثَنَا مَرْوَانُ يَعْنِي ابْنَ سَالِمٍ الْمُقَفَّعَ قَالَ رَأَيْتُ ابْنَ عُمَرَ يَقْبِضُ عَلَى لِحْيَتِهِ فَيَقْطَعُ مَا زَادَ عَلَى الْكَفِّ وَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَفْطَرَ قَالَ ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتْ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ அபூதாவூத் 2010, ஹாகிம், பைஹகீ, தாரகுத்னீ ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை ஆதாரமாகக் கொண்டு மேற்கண்ட துஆவை ஓத வேண்டும் என்று நாம் கூறினோம். நமது உரைகளிலும் கட்டுரைகளிலும் நூல்களிலும் இதைத் தெரிவித்தோம். எதன் அடிப்படையில் இதை நாம் ஆதாரமாக ஏற்றோம் என்பதை முதலில் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம். இந்தச் செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்து விட்டுப் பின்வருமாறு கூறுகின்றார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மர்வான் பின் ஸாலிம், அவரிடமிருந்து அறிவிக்கும் ஹுஸைன் பின் வாகித் ஆகிய இருவரும் அறிவிக்கும் ஹதீஸ்களை புகாரி, முஸ்லிம் ஆகிய இரு அறிஞர்களும் ஆதாரமாகக் கொண்டுள்ளனர் என்று குறிப்பிடுகின்றார். ஹாகிம் நூலை மேற்பார்வை செய்த ஹதீஸ் கலை அறிஞர் தஹபீ அவர்கள், மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியின் அறிவிப்பாளர் என்பதை வழிமொழிந்துள்ளார்கள். மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியில் இடம் பெற்றுள்ளார் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் கூறியதன் அடிப்படையில் தான் நாமும் இதை வழிமொழிந்தோம். இமாம் புகாரி ஒருவரை ஆதாரமாகக் கொள்வதென்றால் அவரது நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் தான் ஏற்பார். பலவீனமானவர்களையோ, யாரென்று அறியாதவர்களையோ அவர்கள் ஆதாரமாகக் கொள்வதில்லை. இதில் பெரும்பாலான அறிஞர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. புகாரியின் சில அறிவிப்பாளர்கள் பற்றி சிலர் விமர்சனம் செய்திருந்தாலும் அதில் பெரும்பாலானவற்றுக்குப் பதிலும் அளிக்கப்பட்டுள்ளது. ஹாகிம், தஹபீ ஆகிய இருவரும் மேற்கண்ட அறிவிப்பாளர் பற்றி, புகாரியில் இடம் பெற்றவர் என்று கூறுவதை நம்பித் தான் இதை ஆதாரப்பூர்வமானது என்று கூறினோம். மேலும் இதைப் பதிவு செய்துள்ள தாரகுத்னீ அவர்களும் இதை ஹஸன் எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் என்று சான்றளித்துள்ளார்கள். ஆனால் ஹாகிம், தஹபீ, தாரகுத்னீ ஆகியோரின் கூற்றுக்கள் தவறு என்பது மறு ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் அறிவிக்கும் எந்த ஹதீஸும் புகாரியிலும் முஸ்லிமிலும் இல்லை. ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறான தகவலைத் தந்துள்ளார்கள். புகாரி, முஸ்லிம் நூல்களில் மர்வான் அல்அஸ்பர் என்பார் அறிவிக்கும் ஹதீஸ் தான் இடம் பெற்றுள்ளது. மர்வான் பின் ஸாலிம் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிமில் இல்லை. மர்வான் அல்அஸ்பர் என்பவரை மர்வான் பின் ஸாலிம் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறாக விளங்கி இருக்கலாம் என்று இப்னு ஹஜர் அவர்கள் கூறுவது மறு ஆய்வின் போது நமக்குத் தெரிய வருகின்றது. மேலும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத் தன்மை பற்றி வேறு எந்த அறிஞராவது குறிப்பிட்டுள்ளாரா என்று ஆய்வு செய்ததில் இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாறு கூறியதாகத் தெரியவில்லை. இப்னு ஹிப்பானைப் பின்பற்றி, இமாம் தஹபீ அவர்கள் மட்டும், இவர் நம்பகமானவர் என்று கூறப்பட்டுள்ளார் என்று குறிப்பிடுகின்றார். இப்னு ஹிப்பான் அவர்கள், யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவது வழக்கம். அவரது பார்வையில் நம்பகமானவர் என்றால் யாராலும் குறை கூறப்படாதவராக இருக்க வேண்டும். யாரென்றே தெரியாதவர்களை யாருமே குறை கூறி இருக்க முடியாது. இதனால் யாரென்று தெரியாதவர்களையும் இப்னு ஹிப்பான், நம்பகமானவர் பட்டியலில் இடம் பெறச் செய்து விடுவார். ஹாகிம் அவர்களின் இந்த விதிமுறையை அனைத்து அறிஞர்களும் நிராகரிக்கின்றனர். வேறு எந்த அறிஞரும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தவில்லை. எனவே யாரென்று அறியப்படாத மர்வான் வழியாக இது அறிவிக்கப்படுவதால் இது நிரூபிக்கப்பட்ட நபிமொழி அல்ல. இதன் அடிப்படையில் நோன்பு துறப்பதற்கென்று தனியாக எந்த துஆவும் இல்லை என்பது உறுதியாகின்றது. சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற வேண்டும் என்ற (புகாரி 5376) நபிமொழிக்கேற்ப பிஸ்மில்லாஹ் கூறுவது தான் சரியான நடைமுறை ஆகும். ஏற்கனவே ஒரு கருத்தைச் சொல்லி விட்டால் அது தவறு என்று தெரிந்த பின்னர் அதில் பிடிவாதமாக இருப்பதும், பொருந்தாத காரணம் கூறி நியாயப்படுத்துவதும் இறையச்சத்திற்கு எதிரானதாகும். நமது கவுரவத்தை விட மார்க்கம் முக்கியமானது என்ற அடிப்படையில் இதைத் தெளிவுபடுத்துகின்றோம். 
    onlinepj

    jeudi 18 juillet 2013

    ரமழான் மாதம் தொடர்பான ஆதாரமற்ற செய்திகள்.


    அருள்மிகு ரமழான் மாதம் நம்மை முன்னோக்கி வரக்கூடிய இந்நேரத்தில் அந்த மாதம் தொடர்பாக பதியப்பட்டுள்ள ஆதாரமற்ற செய்திகளை நாம் அறிந்து கொள்வது சாலச்சிறந்ததாகும்.
    ஏன் என்றால் எது சரியான தகவல், எது பிழையான தகவல் என்ற பிரித்தறியும் தன்மை நம்மிடம் இருந்தால் தான் நமது வாழ்க்கையில் இறைவனுக்கு செய்யக்கூடிய கடமைகளை நாம் சரியாக நிறை வேற்ற முடியும்.
    பல சந்தர்பங்களில் சரி என்று நினைத்துக் கொண்டு தவறை நாம் செய்து கொண்டிருப்போம் தவறு என்று நினைத்துக் கொண்டு சரியைச் செய்யாமலும் இருப்போம். அதிலும் குறிப்பாக ரமழான் மாதத்தைப் பொருத்தவரையில் அந்த மாதத்தில் அதிகமான நன்மைகளை நாம் செய்ய வேண்டும் என்ற நல்லண்ணத்தின் காரணத்தினால் ஹதீஸ் என்று யார் எதைச் சொன்னாலும் நாம் அதனை செயல்படுத்த முன்வந்து விடுகிறோம்.
    இதன் காரணத்தினால் தான் இந்தக் கட்டுரை மூலமாக ரமழான் பற்றி மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கக் கூடிய ஹதீஸ்களை நாம் தொகுத்துத் தந்துள்ளோம்.
    ரமழானின் மூன்று பகுதிகள்.
    ரமலானின் முதல் பகுதி அருளாகவும், நடுப்பகுதி மன்னிப்பு வழங்கப்படக் கூடியதாகவும், இறுதிப் பகுதி நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கப் பெறக் கூடியதாகவும் இருக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    நூல்:  இப்னு குஸைமா (பாகம்: 3 பக்கம்: 191), ஷுஅபுல் ஈமான் (பைஹகீ,பாகம்: 3, பக்கம்: 306)
    இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அலீ பின் ஸைத் பின் ஜுத்ஆன் என்பவர் இடம் பெறுகிறார். இவரை அஹமத் பின் ஹன்பல் போன்றோர் விமர்சித்துள்ளனர்.
    (நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்: 5, பக்: 156)
    மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் யூஸுப் பின் ஸியாத் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரைப் பற்றி புகாரீ அவர்கள், “ஹதீஸ் துறையில் நிராகரிக்கப்பட்டவர்” என்றும் தாரகுத்னி அவர்கள், “பொய்யான செய்தியை அறிவிப்பதில் பிரபலமானவர்” என்றும் இன்னும் பல்வேறு அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
    (நூல்: லிஸானுல் மீஸான், பாகம்: 6, பக்:321)
    மாதத்தின் தலைவர் ரமழானாகும்?
    அபீ ஸயீத் அல் குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள்:  மாதங்களின் தலைவர் ரமலான் மாதமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    (நூல்: தப்ரானி கபீர், பாகம்: 9 பக்:205 - ஷுஅபுல் ஈமான், பாகம்: 3 பக்: 314)
    இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் யஸீத் பின் அப்துல் மலீக் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவராவார். மேலும் இதைப் பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களே இதன் அறிவிப்பாளர் தொடரில் பலவீனம் இருக்கிறது என்று கூறியுள்ளார்கள்.
    இதே செய்தி தப்ரானீ அவர்களின் அல்முஃஜமுல் கபீரில் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது அறிவிப்பாளர் தொடர் துண்டிக்கப்பட்டதாகும் என்று இமாம் ஹைஸமீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
    மாலை நேரத்தில் பல் துலக்கக் கூடாதா?
    அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நீங்கள் நோன்பு வைத்தால் காலையில் பல் துலக்கி விடுங்கள். மாலையில் துலக்காதீர்கள்! ஏனெனில் மாலை நேரத்தில் உதடுகள் காய்ந்த நிலையில் நோன்பாளி இருந்தால்  கியாம நாளில் அவருடைய இரண்டு கண்களுக்கு மத்தியில் ஒளி உண்டாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    நூல்:  தப்ரானி கபீர் (பாகம்: 4, பக்கம்: 78)
    இதில் அபுஅம்ரு என்ற கைஸான் என்பவர் இடம் பெறுகிறார். இவரை ஏராளமான அறிஞர்கள் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளார்கள்.
    (நூல்: மீஸான் அல் இஃதிதால், பாகம்:5, பக்: 205)
    பிரயாணத்தில் நோன்பு நோற்றால் அரஃபா மலையளவு பாவமா?
    அபூ துஃமா என்பவர் அறிவிக்கிறார்:  நான் இப்னு உமரிடம் இருக்கும் போது ஒரு மனிதர் வந்து அப்துர்ரஹ்மானே! நான் பயணத்திலும் நோன்பு வைப்பதற்குச் சக்தி பெற்றுள்ளேன் (நான் நோன்பு நோற்கலாமா?) என கேள்வி கேட்டார். அதற்கு இப்னு உமர் அவர்கள், யார் அல்லாஹ்வுடைய அனுமதியை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவன் மீது அரபா மலை அளவு பாவம் ஏற்பட்டு விடும் என்று அல்லாஹ்வின் தூதர் கூற செவியுற்றுள்ளேன்.
    நூல்: அஹ்மத் (5135), தப்ரானீ கபீர்
    இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் “இப்னு லஹிஆ”என்பவர் மனன சக்தியில் குறைவுடையவர் என்றும் பலவீனமானவர் என்றும் பல அறிஞர்கள் குறை கூறியுள்ளனர். (தஹ்தீபுத் தஹ்தீப்)
    பரிந்துரை செய்யும் நோன்பும்குா்ஆனும்.
    அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அறிவிக்கிறார்கள்: நோன்பும் குர்ஆனும் கியாம நாளில் அடியானுக்குப் பரிந்துரை செய்யும். நோன்பு இறைவனிடத்தில் முறையிடும்.  என் இறைவனே! இந்த அடியானை நான்  பகலில் உணவை விட்டும் ஆசைகளை விட்டும் தடுத்து விட்டேன். இவருடைய விஷயத்தில் என்னுடைய பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக! என்று கோரும். குர்ஆன் கூறும்: (யா அல்லாஹ்!) இரவு நேரங்களில் அவனுடைய தூக்கத்தைத் தடுத்து விட்டேன். ஆகவே இவர் விஷயத்தில் என்னுடைய பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக என்று கோரும். அவை இரண்டின் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    நூல்: அஹ்மத் (6337)
    இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் “இப்னு லஹிஆ”என்பவர் மனன சக்தியில் குறைவுடையவர் என்றும் பலவீன மானவர் என்றும் பல அறிஞர்கள் குறை கூறியுள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்)
    ரமலான் சீராகி விட்டால்வருடம் முழுவதும் சீராகிவிடும்…
    ரமலான் (மாதம் நற்காரியங்கள் செய்வதன் மூலம்) சீராகி விட்டால் அந்த வருடம் (முழுவதும்) சீராகி விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: ஷுஅபுல் ஈமான் (பைஹகீ) பாகம்: 3,பக்கம் 340
    இச்செய்தியில் இடம் பெறும் ஆறாவது அறிவிப்பாளர் அபூமுதீஃ என்ற அல்ஹகம் பின் அப்துல்லாஹ் அல்பல்கீ என்பவர் இடம் பெற்றுள்ளார்.
    இவர் பலவீனமானவர். எனினும் அப்துல் அஸீஸ் பின் அபான் அல்பல்கீ என்பவர் இடம் பெற்றிருப்பதே சரியானதாகும் என்று கூறும் இமாம் பைஹகீ அவர்கள் இவரும் பலவீனமானவர்  என்று அதே நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
    ரமலான் என்று கூறக்கூடாதா?
    ரமலான் என்று கூறாதீர்கள்! ஏனெனில் அது அல்லாஹ்வுடைய திருநாமங்களில் ஒன்றாகும். எனவே நீங்கள் ஷஹ்ரு ரமலான் (ரமலான் மாதம்) என்று கூறுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
    அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: பைஹகீ (7293)
    இச்செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் முஹம்மத் பின் அபீ மிஃஷர் என்பவர் பலவீனமானவர் என்பதை இதைப் பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களே இந்த ஹதீஸின் கீழே குறிப்பிட்டுள்ளார்கள்.
    தக்க காரணமின்றி நோன்பை விட்டால்…..
    நோயோ தக்க காரணமோ இன்றி ரமலானில் ஒரு நாள் நோன்பை விட்டு விட்டால் காலமெல்லாம் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாதுஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி (655)
    இந்தச் செய்தியைப் பற்றி ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் புகாரியின் விரிவுரை நூலான பத்ஹுல் பாரியில்  குறிப்பிடும் போது, “இந்தச் செய்தியில் மூன்று குறைபாடுகள் உள்ளன. 1. அறிவிப்பாளரில் குளறுபடிகள்2. இதில் இடம் பெறும் அபுல் முதவ்விஸ் என்பவரின் விவரம்  தெரியவில்லை. 3. இதன் இரண்டாவது அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் செவியுற்றாரா? என்பதில் ஐயம் உள்ளது” என்று கூறி இந்தச் செய்தி பலவீனமானது என்பதைத் தெளிவு படுத்தியுள்ளார்கள்.
    ரமழான் முதல் நாள் காலையை அடைந்தால் பாவமன்னிப்பு.
    ரமலான் மாதத்தின் முதல் நாள் காலையை அடைந்த எந்த முஸ்லிம்களின் பாவத்தையும் அல்லாஹ் மன்னிக்காமல் விடுவதில்லை”என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி) அவர்கள்.
    நூல்கள்: தாரிக் பக்தாத், பாகம்: 5, பக்கம்: 90, அல்இலலுல் முதநாஹிய்யா
    இச்செய்தியில் இடம் பெற்றிருக்கும் இரண்டாவது அறிவிப்பாளர் ஸியாத் பின் மைமூன் என்பவரும், மூன்றாவது அறிவிப்பாளர் ஸல்லாம் அத்தவீல் என்பவரும் பெரும் பொய்யர்கள்.
    இவர்களை இமாம் புகாரீ, நஸயீ, மற்றும் தாரகுத்னீ ஆகியோர் கடுமையாக விமர்சனம் செய்ததை இதைப் பதிவு செய்தவர்களில் ஒருவரான இமாம் இப்னுல் ஜவ்ஸீ தனது அல்இலலுல் முதநாஹிய்யா என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
    ரஜப் மாதத்தில் ரமழானைப் பற்றிய துஆ.
    அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:  நபி (ஸல்) அவர்கள் ரஜப் மாதம் வந்து விட்டால் யா அல்லாஹ் ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாதத்திலும் எங்களுக்கு பரகத் செய்வாயாக! எங்களுக்கு ரமலான் மாதத்தையும் அடையச் செய்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.
    அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்கள்: அஹ்மத் (2228)
    பஸ்ஸார், தப்ரானி
    இதன் அறிவிப்பாளர் தொடரில் ஸாயிதா பின் அபிர்ருகாத் என்பவர் இடம் பெறுகிறார். இவரை இமாம் புகாரீ அவர்கள் ஹதீஸ் துறையில் நிராகரிக்கப்பட்டவர் என்று விமர்சனம் செய்துள்ளார்.
    (நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்:  3 பக்கம்:  95)
    மதீனாவில் நோன்பு மற்ற இடங்களைவிட சிறந்ததா?
    மதீனாவில் நோன்பு வைப்பது மதீனா அல்லாத மற்ற ஊர்களில் ஆயிரம் நோன்பு வைப்பதை விட சிறப்பானதாகும். மேலும் மதீனாவில்  ஜும்ஆவை நிறைவேற்றுவது மற்ற ஊர்களில் நிறைவேற்றும் ஆயிரம் ஜும்ஆவை விட சிறப்பானதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று பிலால் பின் ஹாரிஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
    (நூல்: தப்ரானீ – கபீர் பாகம்: 1, பக்கம்: 372)
    இதன் அறிவிப்பாளர் தொடரில் அப்துல்லாஹ் பின் கஸீர் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரும் பலவீனமானவர். (லிஸானுல் மீஸான் பாகம்: 3,பக்கம்: 329)
    பத்து நாள் இஃதிகாப் இரண்டு ஹஜ்ஜுக்கு சமனானதா?
    யார் ரமலான் மாதத்தில் பத்து நாட்கள் இஃதிகாப் இருக்கிறாரோ அவர் இரண்டு ஹஜ், மற்றும் இரண்டு உம்ரா செய்தவர் போன்றவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    அறிவிப்பவர் ஹஸன் (ரலி), நூல்:  ஷுஅபுல் ஈமான், பாகம்: 3, பக்கம்: 425
    இதில் முஹம்மத் பின் ஸாதான் என்பவர் இடம் பெறுகிறார். இவருடைய ஹதீஸ்கள் நிராகரிக்கப்படவேண்டியவை என்று புகாரீ அவர்கள் உட்பட பலர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். மேலும் இச்செய்தியில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பாளர் அன்பஸா பின் அப்துர் ரஹ்மான் என்பவரையும் இமாம் புகாரீ போன்றோர், இவருடைய ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை” என்று கூறியுள்ளனர்.
    (நூல்: தஹ்தீப் தஹ்தீப், பாகம் 8 :  பக்கம்: 143, பாகம்:  9, பக்கம்: 145)
    மக்காவில் ரமழானை அடைவது.
    யார் ரமலானை மக்காவில்  அடைந்து, (அதிலே) நோன்பு வைத்து இயன்ற அளவு இரவுத் தொழுகை தொழுகிறாரோ அவருக்கு, மக்கா அல்லாத மற்ற ஊர்களில் நோன்பு வைத்த நன்மையை விட ஆயிரம் மாதங்கள் நோன்பு வைத்து தொழுத நன்மைகள் கிடைக்கின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    நூல்:  இப்னுமாஜா (3108)
    இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அப்துர் ரஹீம் பின் ஸைத் அல் அம்மீ என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்பதை ஹதீஸ் துறையில் ஏராளமான அறிஞர்கள் பலவித வார்த்தைகளில் தெளிவு படுத்தியுள்ளார்கள்.
    (தஹ்தீபுத் தஹ்தீப் பாகம்: 6, பக்கம்: 273)
    சென்ற வருட நோன்பை களா செய்யாவிட்டால்……
    அபூஹுரைரா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்:  யார் ரமலான் மாதத்தை அடைந்து அவர் சென்ற ரமலானின் நோன்பை களாச் செய்யவில்லையானால் அவரின் நோன்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    (நூல்:  தப்ரானீ  அவ்ஸத், பாகம்:  3, பக்கம்:  321)
    இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் ”இப்னு லஹிஆ”என்பவர் மனன சக்தியில் குறைவுடையவர் என்றும் பலவீன மானவர் என்றும் பல அறிஞர்கள் குறை கூறியுள்ளனர். (தஹ்தீபுத் தஹ்தீப்)
    நோன்பு உடலுக்குறிய ஸக்காத்தா?
    “ஒவ்வொரு பொருளுக்கும் ஸகாத் (கடமை) இருக்கிறது. உடலுடைய ஸகாத் நோன்பாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
    அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி), நூல்: இப்னு மாஜா (1735)
    இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் “மூஸா பின் உபைதுல்லாஹ்”என்பவர் இடம் பெறுகிறார். இமாம் அஹ்மத், நஸயீ, இப்னு அதீ, இப்னு மயீன் ஆகியோர் பலவீனமானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
    (மீஸானுல் இஃதிதால், பாகம் 6, பக்கம்: 551)
    பித்ரா இல்லாமல் நோன்பு கூடாது?
    ரமலான் மாதம் (அதாவது அம்மாதத்தின் நோன்பு) வானத்திற்கும் பூமிக்கும் மத்தியில் தொங்கவிடப் பட்டிருக்கும். பித்ரா தர்மம் கொடுக்கும் வரை அது (அல்லாஹ்விடம்) உயர்த்தப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    (நூல்கள்: அல் இலலுல் முதநாஹிய்யா, கன்ஸுல் உம்மால்>அல்ஜாமிவுஸ்ஸகீர்)
    இச்செய்தியில் இடம் பெறும் ஐந்தாவது அறிவிப்பாளர் முஹம்மத் பின் உபைத் என்பவர் யாரென அறியப்படாதவர் என்று இச்செய்தியைப் பதிவு செய்த இமாம் இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இதை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தனது ஸிஸானுல் மீஸான் என்ற நூலிலும் உறுதி செய்துள்ளார்கள்.
    நன்றி ரஸ்மின் .misc (sltj)      

    dimanche 14 juillet 2013

    ரமளான்

    ரமளான்

    உலக மக்கள் அனைவரையும் நேர்வழிப்படுத்த இறைவனால் அனுப்பப் பட்ட இருதித் தூதர் நபிகள் நாயகம்(ஸல்)அவர்களுக்கு கொடுக்கப் பட்ட அற்புதம் தான் திருக்குர்ஆன் அந்த திருமறை கிடைத்த ரமழான் மாதம் நம்மை நோக்கி வந்து  விட்டது .

    இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும.;நோயாளியாகவோ பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாட மாட்டான ். எண்ணிக்கையை நீங்கள் முழுமையாக்குவதற்காகவும் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்திடவும் நன்றி செலுத்திடவும் (வேறு நாட்களில் நோற்கும் சலுகை வழங்கப்பட்டது (2:185).
    நாம் பதினோரு மாதங்கள் செய்யும் பாவங்களை அழித்து நன்மையின் பக்கம் நம்மை அழைக்கும் மாதம் இந்த ரமழான்.

    முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப் படும் மாதம்.
    ரமழான் மாதத்தில் நம்மிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்றால் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப் படும் என்று நபியவர்கள் கூறுகிறார்கள்.

    யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப் படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

    அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ (1901) முஸ்லிம் (1393)

    அருள் வாயல்கள் திறக்கப் படும் மாதம்.

    “ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
    நூல்கள்: புகாரீ (1898),முஸ்லிம் (1956)

    ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
    நூல்கள்: புகாரீ (1899),முஸ்லிம் (1957)

    நம்மை பாவங்களில் இருந்து காப்பாற்றி நன்மையை மாத்திரம் செய்வதற்று இந்த மாதம் தூண்டுவதால் தான் இந்த செய்திகளை நபியவர்கள் சொல்கிறார்கள்.

    சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டு ஷைத்தான்கள் விளங்கிடப் படும் மாதம் இது இந்த மாதத்தில் அதிகமாக நன்மைகளை செய்வதில் நாம் அதிகம் கவணம் செலுத்த வேண்டும்.

    அதிக நன்மைகளை பெற்றுத் தரும் மாதம்

    நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
    அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) , நுல்: முஸ்லிம் (2119)

    ரமழான் மாத நோன்பு எனக்குறியது அதற்கு நனே கூலி கொடுக்கிறேன் என்று இறைவன் கூறுகிறான் இந்த மாத்த்தில் நாம் தீய பேச்சுக்கள் பேசுவதை விட்டும் நம்மை பாதுக்காத்துக் கொள்ள வேண்டும்.

    யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ 1903)
    உம்ரா செய்தால் ஹஜ் நன்மை.

    ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்த நன்மையை பெற்றுத் தரும்.

    ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரீ (1782) முஸ்லிம் (2408)

    சுவர்க்கத்தில் தனி வாசல்.

    சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு �® �வரும் நுழைய மாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி) 

    நூல்: புகாரீ (1896) முஸ்லிம் (2121)

    இறைவனுக்கு மிக விருப்பமான வணக்கம்.

    நோன்பு இறைவன் மனிதனுக்கு கட்டளையிட்ட வணக்கங்களிலேயே மிகவும் விருப்பமானதாகும்.

    நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்துரியை விடச் சிறந்ததாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நுல்: புகாரீ (1894)

    நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1904)

    ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.

    இம்மாதத்தில் உள்ள லைத்துல் கத்ர் எனும் இரவில் செய்யப்படும் வணக்கம் ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்தை விடச் சிறந்ததாகும். உதாரணத்திற்கு ஒருவர் ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்கள் தொழுது வந்தால் கிடைக்கும் நன்மையை விட இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதற்குக் கூடுதலான நன்மைகள் கிடைக்கும்.

    மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும்இ ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். 

    (அல்குர்ஆன் 97:1-5)

    எனவே இந்த ரமழானை நாம் சுவர்க்கம் செல்லும் வழியாக அமைத்துக் கொள்ள முயல்வோமாக. 
    நன்றி ரஸ்மின் .misc (sltj)         
    அனுப்பியவர் அமீன் ஆஷிக் 

    தவறான அறிவிப்பு


    இந்த வருடம் பிரான்சில்  ரமலான் பிறையை வழக்கத்திற்கு மாறாக இரண்டு மாதங்களுக்கு முன்பே முடிவு செய்து விட்ட காரணத்தினால் பெரும் குழப்பம்  நிலவியது. இதற்க்கு காரணம் (CFCM) என்ற அமைப்பின் மார்க்கத்திற்கு முரணான வகையில் எடுத்த முடிவே காரணம்.ஏனென்றால் ஆங்கிலேய காலண்டர்
     (சூரிய அடிப்படை) அடிப்படையில் பிறையை கண்களால் காணாமல் முன்பே அறிவித்து விட்டார்கள்.

    ஆனால் இறுதியில் பிறை தென்படாததால் இவர்கள் அறிவிப்பின் படி நோன்பு வைத்தவர்கள் சிலர் அதை தொடர்வதா அல்லது விட்டுவிடுவதா என்று குழம்பி விட்டனர். ஆனால் நமது நிர்வாகிகள்  
    உடனே அனைவருக்கும் குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி விட்டார்கள். நமது மார்க்கத்தில் ரமலானை முடிவு செய்வது பற்றி நபி(ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்து விட்டார்கள்.ஆகையால் பிறையை கண்கள் பார்த்தே  முடிவுசெய்ய வேண்டும்.

     அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 
    பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்!

    அறிவிப்பவா; : அபூஹுரைரா (ரலி)      நூல் : புகாரி (1019)

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 
    மாதம் என்பது இருபத்து ஒன்பது நாட்களாகவும் இருக்கும். முப்பது நாட்களாகவும் இருக்கும். பிறையை நீங்கள் கண்டால் நோன்பு வையுங்கள். அதைப் பார்த்தே நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் குறுக்கிட்டால் எண்ணிக்கையை முழுமைப்படுத்துங்கள்.

    அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : நஸாயீ (2109)