புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

அரபு மொழி பயிற்சி


அரபு மொழி பயிற்சி
ஆசிரியர் : பி.ஜைனுல் ஆபிதீன்
திருக்குர்ஆனை எளிதில் ஓதுவதற்காக நடத்தப்பட்ட சிறப்பு அரபு மொழி பயிற்சி

குரானைத் தொட்டு முத்தமிடலாமா?


திருமறைக் குர்ஆனைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் பலர் குர்ஆனைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அப்படி முத்தமிடுவதை ஒரு வணக்கமாகக் கூட நினைக்கிறார்கள். குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்ற காரணத்தினால் தான் குர்ஆன் மகத்துவம் அடைகிறது..

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை


மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)


நபி வழி தொழுகை வீடியோ தொழுகை மற்றும் உளு செய்யும் முறை செயல் முறை - கோவை ரஹ்மத்துல்லாஹ் வீடியோ - TNT...

தொழுகை முறை


'நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் - ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 812

FRTJ ஃபிரெஞ்சு


jeudi 22 septembre 2011

இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன். பெருமளவில் இஸ்லாமை தழுவும் பிரிட்டன் மக்கள்.


இது, கடந்த சில நாட்களுக்கு முன் (4th January 2011) பிரிட்டனின் புகழ் பெற்ற நாளிதழான "தி இண்டிபெண்டன்ட்" தனது கட்டுரை ஒன்றிற்கு வைத்த தலைப்பு.   

ரிச்சர்ட் டாகின்ஸ் தளம் தொடங்கி பல்வேறு தளங்களில் பரபரப்பை/விவாதத்தை உண்டாக்கியிருக்கின்றது இந்த கட்டுரை.
கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்கும் பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக குறிப்பிடும் அந்த கட்டுரை கீழ்க்காணும் தகவல்களை தெரிவிக்கின்றது.

----------------------
"பிரிட்டனில் எத்தனை மக்கள் இஸ்லாமை தழுவி இருக்கின்றார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட மிக விரிவான மதிப்பீடு முயற்சி, கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக கூறுகின்றது. 

இஸ்லாம் குறித்த எதிர்மறையான சித்தரிப்புகள் அதிகமிருந்தாலும், ஆயிரக்கணக்கான பிரிட்டன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமை தழுவுகின்றார்கள். 

பழைய மதிப்பீடுகள், இஸ்லாத்தை தழுவிய பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை சுமார் 14,000 திலிருந்து 25,000 வரை இருக்கலாமென சொல்லுகின்றன.  

ஆனால், Faith Matters அமைப்பின் புதிய ஆய்வு, இந்த எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் வரை இருக்கலாமென தெரிவிக்கின்றது. (அது மட்டுமல்லாமல்) ஒவ்வொரு வருடமும் சுமார் 5000 பிரிட்டன் மக்கள் இஸ்லாமை தழுவதாகவும் தெரிய வருகின்றது.  
ஸ்காட்டிஷ் 2001 மக்கள் தொகை கணக்குப்படி, 2001 ஆம் ஆண்டு வாக்கில், இஸ்லாத்தை தழுவிய பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை 60,699 என ஆய்வாளர்கள் மதிப்பிட்டிருக்கின்றனர். அடுத்த ஆண்டு வரை புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எதுவும் திட்டமிடப்படவில்லை. 

ஒவ்வொரு வருடமும் எத்தனை மக்கள் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக தேர்ந்தெடுக்கின்றனர் என்பதை அறிய விரும்பிய ஆய்வாளர்கள், லண்டனில் உள்ள பள்ளிவாசல்களில் கணக்கெடுப்பு நடத்தினர்.  

அப்படி நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் என்ன சொல்கின்றன என்றால், கடந்த பனிரெண்டு மாதங்களில் பிரிட்டனின் தலைநகரில் மட்டும் சுமார் 1,400 பேர் இஸ்லாத்தை தழுவியிருக்கின்றனர். இந்த தொகையை நாடு முழுவதும் கணக்கிட்டு பார்த்தால் சுமார் 5,200 பேர் ஒவ்வொரு வருடமும் தங்களை இஸ்லாமிற்குள் ஐக்கியப்படுத்தி கொள்கின்றனர். இதனை ஜெர்மனி மற்றும் பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வுகளோடு ஒப்பிட்டோமானால், அங்கே சுமார் 4000 மக்கள் ஒவ்வொரு வருடமும் இஸ்லாத்தை தழுவுகின்றனர். 

இஸ்லாமை தழுவியவர்களின் நம்பத்தகுந்த எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடுவது கடினம் என்பதை ஒப்புக்கொண்டுள்ள Faith Matters அமைப்பின் இயக்குனர் பியாஸ் முகல், "மக்கள் தொகை கணக்கெடுப்பு, உள்ளூர் வல்லுனர்களின் தகவல்கள், மசூதிகளில் நடத்தப்பட்ட ஓட்டெடுப்பு போன்றவற்றை அடிப்படையாக வைத்து திரட்டப்பட்ட சிறந்த அறிவார்ந்த யூகம் இந்த அறிக்கை"என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், " எப்படி இருப்பினும், கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை ஏற்றவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்திருப்பதை மிகச் சிலரே சந்தேகம் கொள்வார்கள்".

ஏன் அதிக அளவில் மக்கள் இஸ்லாமை தழுவுகின்றனர் என்று கேட்டதற்கு அவர்,"பொதுவாழ்வில் இஸ்லாமின் முக்கியத்துவத்திற்கும், அதிகரித்து வரும் தழுவல்களுக்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கின்றேன். இஸ்லாம் எதைப்பற்றியது என்பதை அறிய ஆர்வம் காட்டுகினறனர் மக்கள். அவர்கள் அப்படி செய்யும் போது பல்வேறு திசைகளில் சென்று விடுகின்றனர். பலரும் தங்களுடைய சகஜ வாழ்க்கைக்கு திரும்பி விடுகின்றனர். ஆனால் சிலரோ, எது குறித்து அவர்கள் ஆராய ஆரம்பித்தனரோ அதில் தாங்கள் கண்டுபிடித்தவற்றை விரும்ப ஆரம்பித்து அதையே தழுவி விடுகின்றனர்"

இது குறித்து கருத்து தெரிவிக்கும் Muslims4uk தளத்தின் நிறுவனர் இனாயத் பங்லவாலா, "இந்த முடிவுகள் என்ன தெரிவிக்கின்றன என்றால், 600 பிரிட்டன் மக்களில் ஒருவர் இஸ்லாத்தை தழுவுபவராக இருக்கின்றார். இஸ்லாம் ஒரு மிஷனரி மார்க்கம். நிறைய இஸ்லாமிய அமைப்புகள், குறிப்பாக பல்கலைகழக மாணவர் இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாம் குறித்த தவறான கருத்துக்களை களைய தீவிரமாக செயல்பட்டு வருகின்றன" என்று குறிப்பிடுகின்றார். 
இஸ்லாமை தழுவுவதென்பது எளிதான ஒன்று. டெக்னிகலாக, முஸ்லிமாவதற்கு ஒருவர் செய்ய வேண்டியதெல்லாம் ஷஹாதா கூறுவது மட்டும்தான். அதாவது, "இறைவன் ஒருவனே, முஹம்மது (ஸல்) அவர்கள் அவனின் தூதர்" என்று மனப்பூர்வமாக சொல்லுவது மட்டும் முஸ்லிமாவதற்கு போதுமானது. ஆனால் பெரும்பாலானவர்கள் இதனை இரண்டு சாட்சிகளுக்கு மத்தியில் சொல்லுவதையே விரும்புகின்றனர்."
----------------------------

நீங்கள் மேலே பார்த்த தகவல்கள் மட்டுமல்லாமல், இஸ்லாமை தழுவிய சில சகோதர/சகோதரிகளின் (கதிஜா ரீபக், ஸ்டுவர்ட் மீ, பால் மார்டின், தாவுத் மீலே, டெனீஸ் ஹோர்ஸ்லி, ஹானா தஜிமா) கருத்துக்களையும் வெளியிட்டிருக்கின்றது தி இண்டிபெண்டன்ட்.

அழைப்பு பணியில் தீவிரமாக செயல்படும் அப்துர் ரஹீம் கிரீன், யூசுப் சேம்பர்ஸ், ஹம்சா அன்ட்ரியஸ் மற்றும் ஆடம் தீன் போன்றவர்களின் நாடான பிரிட்டன் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை தன்னகத்தே கொண்ட நாடு. தி இண்டிபெண்டன்ட் கூறியிருக்கும் இந்த தகவல்களுக்கு பின்னால், இஸ்லாத்தை பற்றிய தவறான கண்ணோட்டங்களை களைய பாடுபடும் அந்த இயக்கங்களுக்கு நிச்சயம் பங்கிருக்கவேண்டும்.

குறிப்பாக ஒரு அமைப்பை பற்றி சொல்லியாக வேண்டும். IERA (Islamic Education and Research Academy) என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு மகத்தான இஸ்லாமிய அழைப்பு பணியை செய்து வருகின்றது. இவர்களுடைய செயல் திட்டம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவை,
  • Mission Dawah - அழைப்பு பணியில் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ ஈடுபடும் முஸ்லிம்களை கொண்ட ஒரு மாபெரும் இயக்கத்தை உருவாக்குவது தான் இந்த பிரிவின் குறிக்கோள். 
  • Muslim Now - புதிதாய் இஸ்லாமை தழுவியவர்களுக்கு இஸ்லாமிய கல்வி மற்றும் இதர உதவிகளை செய்யும் பிரிவு. 
  • One Reason  - முஸ்லிமல்லாதவர்களுக்கான இஸ்லாம் குறித்த தகவல்களை தயாரிக்கும் பிரிவு. 
  • The Big Debates - முஸ்லிமல்லாத மக்களிடம் ஆரோக்கியமான முறையில் உரையாடுவதே இந்த பிரிவின் குறிக்கோள். இதுவரை பல விவாதங்களை சந்தித்துள்ளது இந்த பிரிவு. இதில் பிரபல நாத்திகர்களும் அடக்கம். 

மேலே காணும் பிரிவுகளை உற்று நோக்கினால் IERAவின் செயல் திட்டம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பதை காணலாம்.
அழைப்பு பணியில் IERA போன்ற அமைப்புகள் எந்த அளவு தீவிரமாக செயல்படுகின்றனவோ அது போலவே பிரிட்டனின் இஸ்லாமிய இளைஞர் அமைப்புகளும் செயல்படுகின்றன. 

இஸ்லாமிற்கு எதிரான பிரச்சாரங்கள் சிலரால் வரலாறு முழுக்க தீவிரமாக கையாளப்பட்டிருந்தாலும்/கையாளப்பட்டாலும், அந்த பிரச்சாரங்கள் இது வரை வெற்றி பெற்றதில்லை. அதற்கு எதிர்மறையாக, தொடர்ந்து அதிக அளவில் மக்கள் இஸ்லாத்தை தழுவி தான் வருகின்றார்கள். இது வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. இறைவன் நாடினாலன்றி இனி மேலும் அந்த சிலர் வெற்றி பெற போவதில்லை.

இஸ்லாம் தொடர்ந்து முஸ்லிமல்லாத சகோதர/சகோதரிகளின் உள்ளங்களை ஈர்க்கும். சகோதரர் காலித் யாசின் ஒருமுறை குறிப்பிட்டது போல, நாம் தாவாஹ் என்னும் உள்ளங்களை துளைக்கும் குண்டை என்றும் நம்முடன் வைத்திருப்போம். அது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல ஒவ்வொரு முஸ்லிமின் கடமையும் கூட.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர் --- குரான் 3:104 

இறைவன் நம் சமூகத்திற்கு தூய இஸ்லாத்தை எடுத்துரைக்கும் இயக்கங்களையும், அறிஞர்களையும் தொடர்ந்து தந்தருள்வானாக...ஆமீன்.

இஸ்லாமிய இளைஞர்கள் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட வல்ல இறைவன் உதவி புரிவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

Please Note: 
மேலே கொடுக்கப்பட்டுள்ள மொழிபெயர்ப்பு முழுமையானது அல்ல. முழுமையாக படிக்க கீழே கொடுக்கப்படுள்ள சுட்டியை சுட்டவும்.
 
My sincere thanks to:
1. "The Independent" daily.

References:
1. The Islamification of Britain: record numbers embrace Muslim faith - Jerome Taylor and Sarah Morrison, The Independent, dated 4th January 2011. link
2. Islamic Education and Research Academy. link  
3. Federation of Student Islamic Societies. link

                                                                                                    நன்றி : சகோ.ஆஷிக் அஹமத்
அனுப்பியவர் : sp abdul malick

பிரான்ஸில் முகத்திரைக்கு அபராதம் !

பிரான்ஸில் முழுமையான முகத்திரை அணியக்கூடாது என்ற புதிய சட்டம் வந்த பின்னரும் அதனை தொடர்ந்து அணிந்த இரு பெண்களுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்று அபராதம் விதித்துள்ளது.

முழுமையான முகத்திரைகளை அணியக்கூடாது என்ற தடை கடந்த ஏப்ரல் மாதத்தில் வந்த பின்னர் அதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படுவது இதுதான் முதல் தடவையாகும்.

விவாகரத்துப் பெற்றுக்கொண்டு தனியாக குழந்தையுடன் வசிக்கும் ஹைண்ட் அஹமாஸ் என்பவருக்கும், நஜத் நைட் அலி என்னும் மூன்று குழந்தைகளின் தாய்க்கும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், முகத்திரையை அணிவதற்கான தமது உரிமை ஐரோப்பிய சட்டங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக இவர்கள் இருவரும் மேல்முறையீடு செய்யவுள்ளார்கள்.

முகத்திரையை நீக்க மறுத்த காரணத்துக்காக ஹைண்ட் அஹமாஸ் மற்றும் நஜத் அலி ஆகிய இருவருக்கும் இன்று முறையே 120 மற்றும் 80 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

இதற்கான மேல்முறையீட்டு நடவடிக்கைகளுக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்பதுடன், ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய மனித உரிமைகளுக்கான நீதிமன்றத்திலேயே இறுதி முடிவும் எடுக்கப்படும்.

முழுமையான முதத்திரையை அணிவது என்ற தனது முடிவு சுயமானது என்று கூறுகின்ற ஹைண்ட் அஹமாஸ் அவர்கள், முகத்திரைக்கான தடை கடந்த ஏப்ரலில் அமலுக்கு வந்த பின்னர், தனக்கு வங்கிகள், கடைகள் அல்லது பஸ்கள் என அனைத்து பொது இடங்களிலும் தடை விதிக்கப்பட்டதாகவும், குறைந்த பட்சம் ஒரு தடவைக்கு மேல் வார்த்தைகளாலும், உடல் ரீதியாகவும் தான் தாக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.

இஸ்லாமிய விதிகளின் படி முழுமையான முகத்திரை கட்டாயமானதல்ல என்பதுடன், இது குறித்த விவாதம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்துக்கிடையிலேயே மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன.

இந்தத் தடை குறித்து பெரும் சர்ச்சை நிலவுகின்ற போதிலும், நூற்றுக்கும் குறைவான முகத்திரை அணிந்த பெண்களே இதற்காக வீதிகளில் தடுக்கப்பட்டதுடன், பத்துக்கும் குறைவான பெண்களே நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பெல்ஜியம், இத்தாலி, டென்மார்க், ஆஸ்திரியா, நெதர்லாந்து மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகிய இடங்களிலும் ஒன்றில் இதே போன்ற தடை ஏற்கனவே கொண்டு வரப்பட்டு விட்டது அல்லது கொண்டுவரப்படுகின்றது.

இன்றைய இந்த தீர்ப்பு இந்த அனைத்து நாடுகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தும்.


செய்தி : BBC

samedi 17 septembre 2011

ஜகாத் வழங்குவதாக நேர்ச்சை செய்யலாமா ?


கேள்வி தனது செயல் வெற்றி பெற்றால் ஒரு குறிப்பிட்ட தொகை ஜகாதாக வழங்குவேன் என்று அல்லாஹ்விடன் நிய்யத் வைத்து அது நிறைவேறியவுடன் காலதாமதமாக அந்த தொகையை சிறிது சிறிதாய் வழங்கினால் அது குற்றமா? 

Thamimul Ansari – india

பதில் : உங்கள் கேள்விக்குறிய பதிலைப் பார்ப்பதற்கு முன் நேர்ச்சை பற்றிய ஒரு தெளிவை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அதாவது நமக்கு ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்படும் போது “இறைவா எனக்கு இந்தப் பிரச்சினையை நீ நீக்கினால் உனக்கு நான் இதைச் செய்வேன்“ என்று கூறி இறைவனிடம் பலரும் நேர்ச்சை செய்கிறோம்.

இவ்வாறு நேர்ச்சை செய்வதை இஸ்லாம் அனுமதித்தாலும் நேர்ச்சை செய்யாமல் இருப்பதே உயர்ந்த நிலை என்று அறிவிக்கிறது.

'இறைவா! நீ எனக்காக இதைச் செய்தால் நான் உனக்காக இதைச் செய்வேன்' என்று கூறுவது இறைவனிடம் பேரம் பேசுவது போல் அமைந்துள்ளது. நாம் இறைவனுக்காக எதைச் செய்வதாக நேர்ச்சை செய்கிறோமோ அது இறைவனுக்குத் தேவை என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.

'உனக்காக நான் இதைச் செய்கிறேன்' என்று இறைவனிடம் நாம் கூறும் போது 'அதற்கு ஆசைப்பட்டு நமது கோரிக்கையை இறைவன் நிறைவேற்றுவான்' என்ற மனப்பான்மையின் வெளிப்பாடாகவும் இது தோற்றமளிக்கின்றது.

அதனால் நேர்ச்சையைத் தவிர்க்குமாறு நபியவர்கள் நமக்குக் கட்டளையிடுகிறார்கள்.
நேர்ச்சை செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (இறைவன் விதித்த) எதனையும் நேர்ச்சை மாற்றியமைத்து விடப் போவதில்லை. இதனால் கஞ்சர்களிடமிருந்து (செல்வம்) வெளியே கொண்டு வரப்படும் (என்பதைத் தவிர வேறு பயன் இல்லை) என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி). நூல்: புகாரி 6608, 6693
நேர்ச்சை எந்த ஒன்றையும் முற்படுத்தவோ, பிற்படுத்தவோ செய்யாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 6692
நாம் செய்யும் நேர்ச்சையில் மயங்கி இறைவன் நமது கோரிக்கையை நிறைவேற்ற மாட்டான். அவன் ஏற்கனவே எடுத்திருக்கும் முடிவை நாம் செய்த நேர்ச்சையின் காரணமாக மாற்றவும் மாட்டான் என்பதை மேற்கண்ட நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றன.

நேர்ச்சையினால் ஏற்படும் ஒரே நன்மை கஞ்சர்களின் பொருளாதாரம் நல்வழியில் செலவிடப்படுவது தான். இறைவனுக்காக தமது பொருளாதாரத்தை வாரி வழங்கும் வழக்கமில்லாத கஞ்சர்கள், நேர்ச்சை செய்து விட்டதால் விபரீதம் ஏதும் ஏற்படக் கூடாது என்ற அச்சத்தினால் பணத்தைச் செலவிட முன் வருவார்கள். இது தான் நேர்ச்சையினால் கிடைக்கும் ஒரே பயன் என்பதையும் மேற்கண்ட நபிமொழிகள் விளக்குகின்றன.

துஆக் கேட்பதுதான் சிறந்தது.

அப்படியானால் நமது காரியம் சரியாக நடக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

இது போன்ற சந்தர்ப்பங்களில் இறைவனிடம் பிரார்த்தனை செய்வது தான் சிறந்த வழியாகும்.

'இறைவா! எனக்கு ஏற்பட்ட இந்தத் துன்பத்தை நீ தான் நீக்க வேண்டும். உன்னைத் தவிர நான் வேறு யாரிடம் முறையிடுவேன்?' என்று கோரிக்கை வைப்பதில் தான் பணிவு இருக்கிறது. இறைவனைப் பற்றிய அச்சமும் இதில் தான் வெளிப்படுகின்றது.

உதாரணமாக இரண்டு ரக்அத்கள் தொழுது, அல்லது நோன்பு நோற்று, அல்லது எழைகளுக்கு உதவி செய்து விட்டு 'இறைவா! உனக்காக நான் செய்த இந்த வணக்கத்தை ஏற்றுக் கொண்டு எனது துன்பத்தை நீக்குவாயாக' என்பது போல் இறைவனிடம் பிரார்த்தனை செய்வது நேர்ச்சை செய்வதை விடச் சிறந்ததாகும்.
பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும். (அல்குர்ஆன் 2:45)
நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் 2:153)
இப்போது உங்கள் கேள்விக்கு வருவோம் நேர்ச்சை செய்வதை தவிர்ந்து கொள்வதுதான் சிறந்தது என்றும் நேர்ச்சையினால் இறைவன் விதியில் எதனையும் மாற்ற மாட்டான் என்பதையும் மேற்கண்ட செய்திகள் மூலம் அறிந்தோம். ஆக நேர்ச்சை செய்வதை முதலில் தவிர்ந்து கொள்வது சிறந்தது.

அடுத்து ஸக்காத் கொடுப்பது என்பது நேர்ச்சை செய்யும் விஷயமல்ல. ஸக்காத் என்பது நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் கண்டிப்பாக கொடுக்கப்படவேண்டிய ஒன்றாகும்.  அது நமது சொத்தில் இருந்து ஏழைகளுக்கு தானாகக் கிடைக்க வேண்டிய ஒரு பங்காகும். அதனை நேர்ச்சையில் சேர்க்கக் கூடாது.

நேர்ச்சை செய்வதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிய இஸ்லாம் யாராவது நேர்ச்சை செய்துவிட்டால் அதனை நிறைவேற்றாமல் இருக்கவும் கூடாது என்று சொல்கிறது.

அதாவது நேர்ச்சையினால் இறைவன் விதியில் உள்ளதை மாற்றப் போவதில்லை என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாக இருந்தாலும் யாராவது நேர்ச்சை செய்துவிட்டால் அவர்கள் அதனை கண்டிப்பாக நிறைவேற்றியே தீர வேண்டும்.
அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். தீமை பரவிய நாளைப் பற்றி அஞ்சுவார்கள். (அல்குர்ஆன் 76:7)
பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! பழமையான அந்த ஆலயத்தை தவாஃப் செய்யட்டும். (அல்குர்ஆன் 22:29)
'உங்களுக்குப் பின்னர் ஒரு சமுதாயத்தினர் தோன்றுவார்கள். அவர்கள் மோசடி செய்வார்கள். நாணயமாக நடக்க மாட்டார்கள். சாட்சி கூற அழைக்கப்படாமலே சாட்சி கூறுவார்கள். நேர்ச்சை செய்து விட்டு அதை நிறைவேற்றாமல் இருப்பார்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) நூல்: புகாரி 2651, 3650, 6428, 6695
மேற்கண்ட வசனங்கள் ஒருவர் நேர்ச்சை செய்தால் அதனை நிறைவேற்ற வேண்டும் என்பதைத் தெளிவாக நமக்கு உணர்த்துகின்றன. அதனை பகுதி பகுதியாக நிறைவேற்றுவதற்கு மார்க்கத்தில் எங்கும் அனுமதியில்லை.

 பதில் : ரஸ்மின் MISc

போலீசாருக்கு பர்தாவை விலக்கி முகத்தை காட்டாவி்ட்டால் 1 ஆண்டு சிறை- ஆஸி. அரசு

ஆகஸ்ட் 31, 2011,சிட்னி: முஸ்லீம் பெண்கள் அணிந்துள்ள பர்தாவை, போலீசார் கூறினால் நீக்கி முகத்தை காட்ட வேண்டும். அதற்கு மறுப்பு தெரிவித்தால், 1 ஆண்டு வரை சிறைத் தண்டனை அளிக்கப்படும், என ஆஸ்திரேலியா அரசு கெடுபிடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில், சமீபத்தில் குற்றவாளியான ஒரு கிறிஸ்துவ பெண்ணிற்கு பதிலாக, பர்தா அணிந்த முஸ்லீம் பெண் ஒருவர் போலீசாரால் தவறுவதாக கைது செய்யப்பட்டார். பின்னர், சோதனையில் அவரல்ல என கண்டறியப்பட்ட பிறகு விடுவிக்கப்பட்டார்.

பொது இடங்களில் பெண்கள், பர்தா அணிந்து வருவதால், குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் தப்புவதற்கும் வாய்ப்புள்ளது. இந்த குழப்பங்களை தவிர்க்கும் வகையில், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில், முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவதற்கு, அடுத்த வாரம் முதல் புதிய கட்டுப்பாடுகள் வர உள்ளது.

அதன்படி, சாலையில் செல்லும் முகமுடி அணிந்தவர்கள், ஹெல்மேட் அணிந்தவர்கள், பர்தா அணிந்தவர்கள் ஆகியோரை, சந்தேகத்தின் பேரில் முகத்திரையை போலீசார் நீக்க கூறினால், உடனே அவர்கள் முகத்தை காட்ட வேண்டும். அப்படி காட்டாதவர்களிடம் அபராதம் விதிக்கப்படும்.

அதையும் மீறினால், 1 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். முகத்தை காட்டிய பின் தங்கள் முகத்திரை போட்டுக் கொள்ளலாம். பொது இடங்களில் முகத்தை காட்ட கலாச்சாரம், மதம், தனிப்பட்ட நம்பிக்கைகள் தடுக்கும் பட்சத்தில், அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு சென்று முகத்தை காட்டலாம்.

நீதிமன்றங்களிலும் இந்த சட்டம் அமலில் இருக்கும். சந்தேகத்தின் அடிப்படையில், பெண்களின் முகத்திரையை விலக்கி பார்க்கும் அதிகாரம் போலீசாருக்கு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அது தற்போது சட்டமாகவே இயற்றப்பட்டுள்ளது.

பிரான்ஸ், பெல்ஜீயம், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளின் சில பகுதிகளுக்கு அடுத்தபடியாக தற்போது, ஆஸ்திரேலியாவிலும் இந்த சட்டம் அமலுக்கு வர உள்ளது.


செய்தி : oneindia.in

vendredi 16 septembre 2011

வட்டியிலிருந்து விலகியவருக்கு தண்டனையுண்டா ?


கேள்வி இரு சகோதரர்கள் சேர்ந்து கிரெடிட் கார்டு மூலம் நகை வாங்கி சகோதரிக்கு கொடுக்கின்றனர். இதில் ஒரு சகோதரனுக்கு வட்டி கட்டுவதில் விருப்பமின்மையால் அசலான தங்க நகைக்கு மட்டும் பணத்தைத் தர ஒப்புக் கொள்கிறார். மற்றொரு சகோதரர் வட்டியை சேர்த்து கட்டுகிறார். இதில் வட்டி கட்டாதவருக்கு வட்டி தொடர்புடைய ஏதேனும் பாவத்தை சம்பாதித்த குற்றமாகுமா?

சீனி இஸ்மத் – dhubai uae

பதில் வட்டி என்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒன்றாகும்.

நம்பிக்கை கொண்டோரே! பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் ! இதனால் வெற்றி பெருவீர்கள். ஏக இறைவனை மறுப்போருக்காகத் தயாரிக்கப் பட்டுள்ள நரகத்தை அஞ்சுங்கள்(3:130,131)

வட்டி உண்பவன் மறுமையில் ஷைத்தான் தீண்டியவனைப் போல் எழுப்பப்படுவான்.

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.வியாபாரம் வட்டியைப் போன்றதே என்ற அவர்கள் கூறியதே இதற்குக் காரணம்.அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துவிட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது.அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது.மீண்டும் செய்வோர் நரகவாசிகள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.(2:275)

வட்டியை விடாதவருடன் இறைவன் போர் பிரகடனம் செய்கிறான்.

அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.(2:279)

மேற்கண்ட செய்திகள் அனைத்தும் வட்டி மிகப்பெரியதொரு பாவமான காரியம் என்பதை மிகத் தெளிவாக நமக்கு விளக்குகின்றன.

யாருக்கு வட்டி பாவமான காரியம் என்று தெரிந்து அதிலிருந்து அவர் விளகிக் கொள்கிறாரோ அவருடை பாவத்தை அல்லாஹ் மண்ணிக்கிறான்.

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.வியாபாரம் வட்டியைப் போன்றதே என்ற அவர்கள் கூறியதே இதற்குக் காரணம்.அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துவிட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். (2:275)

வட்டியை விட்டும் யார் விளகிக்கொள்கிறாரோ அவர் அந்தப் பாவத்திலிருந்து தப்பிவிட்டார் என்று அர்த்தமாகிவிடும். மீண்டும் மீண்டும் அதில் ஈடுபடுபவர்கள் நரகவாதிகள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள் என்று மேற்கண்ட வசனம் நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

குறிப்பிட்ட சகோதரர் வட்டியுடன் தொடர்புபடாமல் தான் கொடுக்க வேண்டிய கடனை மாத்திரம் கொடுக்கிறார் என்றால் அவர் வட்டி தொடர்பான பாவத்தில் ஈடுபட்டவராக கருதப்படமாட்டார்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

பதில் : ரஸ்மின் MISc

முதல் இருப்பில் அத்தஹிய்யாத்துக்குப் பின் ஸலவாத் ஓதலாமா?

கேள்வி tholugayil 4 rakat tholumbothu muthal irupil athahiyathuvuku piragu salavaat otha venduma atharathudan vilakavum.

கேள்வி தமிழாக்கம் : தொழுகையில் 4 ரகாத் தொழும்போது முதல் இருப்பில் அத்தஹயாத்துக்கு பிறகு ஸலவாத் ஓத வேண்டுமா ?ஆதாரத்துடன் விளக்கவும்.

பதில்முதல் இருப்பில் அத்தஹிய்யாத்து லில்லாஹி என்று ஆரம்பிக்கும் துஆவை ஓத வேண்டும் என்று ஸஹீஹானா ஹதீஸ்களில் பார்க்கிறோம்.

அத்தஹிய்யாத் துஆ

அத்தஹிய்யா(த்)து லில்லாஹி வஸ்ஸலவா(த்)து வத்தய்யிபா(த்)து அஸ்ஸலாமு அலை(க்)க அய்யுஹன்னபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வபர(க்)கா(த்)துஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு

பொருள்: சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும், வணக்கங்களும், பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக. எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் சாந்தி உண்டாகட்டும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதரும் அடியாருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.

எனத் தொழுகையில் அமரும் போது நபி (ஸல்) அவர்கள் கூறச் சொன்னார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்கள்: புகாரீ 1202, முஸ்லிம் 609

அத்தஹிய்யாத்தில் ஓத வேண்டிய மற்றொரு துஆ.
அத்தஹிய்யா(த்)துல் முபார(க்)கா(த்)துஸ் ஸலவா(த்)துத் தய்யிபா(த்)து லில்லாஹி அஸ்ஸலாமு அலை(க்)க அய்யுஹன் நபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வபர(க்)கா(த்)துஹு அஸ்ஸலாமு அலைனா வஆலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன். அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹி' என்று நபி (ஸல்) அவர்கள் இருப்பில் ஓதுவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 610
மேற்கூறிய இரண்டில் ஏதாவது ஒன்றை ஓதிக் கொள்ளலாம்.

ஸலவாத்.

மேற்கண்டவராரு அத்தஹிய்யாத் ஓதிய பின் நபியவர்கள் மீது ஸலவாத் ஓத வேண்டும். ஸலவாத் ஓதுவதைப் பொருத்தவரையில் முதல் அத்தஹிய்யாத்தில் இல்லை, இரண்டாவது அத்தஹிய்யாத்தில் தான் இருக்கிறது என்று சிலர் வாதிடுவது தவரான வாதமாகும்.

ஏன் என்றால் அத்தஹிய்யாத்து துஆவில் ஓதப்பட வேண்டிய ஸலவாத்தைப் பற்றிய ஹதீஸ்கள் அத்தஹிய்யாத்துக்குப் பின் ஸலவாத்து ஓத வேண்டும் என்று வருகிறதே தவிர இரண்டாவதில் இல்லை நான்காவதில் தான் இருக்கிறது என்றெல்லாம் ஹதீஸில் வரவில்லை.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் அமர்ந்தார். அந்நேரத்தில் நாங்கள் நபிகளாரிடம் இருந்தோம். அப்போது, 'அல்லாஹ்வின் தூதரே! உங்களின் மீது ஸலாம் எவ்வாறு சொல்வது என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் எங்களின் தொழுகையில் எவ்வாறு உங்கள் மீது ஸலவாத் சொல்வது?' என்று கேட்டார். இந்த மனிதர் இக்கேள்வியைக் கேட்காமல் இருந்திருக்கலாமே' என்று நாங்கள் நினைக்கும் அளவு நபி (ஸல்) அவர்கள் மவுனமாக இருந்தார்கள். (பின்னர்) 'நீங்கள் என் மீது ஸலவாத் சொல்வதாக இருந்தால்

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் நபிய்யில் உம்மிய்யி வலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம வபாரிக் அலா முஹம்மதின் நபிய்யில் உம்மிய்யி கமா பாரக்(த்)த அலா இப்ராஹீம வலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்

பொருள்: இறைவா! இப்ராஹீம் நபியின் மீதும், இப்ராஹீம் நபியின் குடும்பத்தினர் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மத் நபியின் மீது உன் அருளைப் பொழிவாயாக! இப்ராஹீம் நபியின் மீதும் இப்ராஹீம் நபியின் குடும்பத்தினர் மீதும் நீ அபிவிருத்தி செய்ததைப் போல் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மத் நபியின் மீது நீ அபிவிருத்தி செய்வாயாக!
என்று கூறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் அம்ர் (ரலி)
நூல்: அஹ்மத் 16455

மற்றொரு ஸலவாத்

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்.

பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்.

இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்தது போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்.

அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி), நூல்: புகாரீ 3370


பதில் : ரஸ்மின் MISc

jeudi 15 septembre 2011

புதிய முஸ்லீம்களை மேடையேற்றி கவுரவிக்களாமா?

கேள்வி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களை மேடையேற்றி கௌரவித்து விழாக்கள் நடத்த இஸ்லாம் அனுமதிக்கிறதா?

shaik shaik abdul rahman – india

பதில்ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது என்பது அவருடைய சுயவிருப்பத்தை பொருத்து நடக்கும் ஒரு செயல்பாடு. இஸ்லாம் தான் நேரான வழி என்று ஒருவர் அறிந்து கொண்டால் அவர் இஸ்லாத்தை தனது வழிமுறையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால் இப்படி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களை கவுரவித்து விழாக்கள் நடத்துவதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் எங்கும் வழிகாட்டுதல் கிடையாது. நபியவர்கள் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்த காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஸஹாபாக்கள் எவரையும் அவர்கள் மேடையேற்றி கவுரவப்படுத்தவுமில்லை, விழாக்கள் நடத்தவுமில்லை.

ஒருவருக்குறிய கவுரவம் என்பதே அவர் இஸ்லாத்தை ஏற்று அதன்படி நடப்பதுதானே தவிர அவருக்காக விழாக்கள் நடத்தி அவரை மேண்மைப்படுத்துவது அல்ல.

ஆக இப்படியான காரியங்களை நாம் கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.

பதில் : ரஸ்மின் MISc

நடத்தை சரியில்லாத தாய்க்கு உபகாரம் செய்ய வேண்டுமா?

கேள்விஅஸ்ஸலாமு அலைக்கும், எனது நண்பர் ஒருவர் தனது தாயாருடன் பல வருடங்களாக உறவில்லாமல் இருக்கிறார். அதற்க்கு காரணம் தனது தாயாரின் நடத்தை சரியில்லாததனால். அதாவது கணவர் இருக்கும் பொழுதே வேறொருவருடன் குடும்பம் நடத்தி வந்தார். அவருக்கு பெரிய பிள்ளைகள் எல்லாம் இருக்கிறார்கள். எந்த பிள்ளைகளும் அவரிடம் தொடர்பு கிடையாது. இந்த சூழ்நிலையில் பெற்றோரை கவனிக்காத குற்றம் வருமா? இதற்க்கு மார்க்கத்தில் தீர்வு என்ன?
ஜமிலா பிரான்ஸ் - france

பதில்இஸ்லாத்தைப் பொருத்தவரையில் எந்த மார்க்கத்திலும் இல்லாத அளவுக்கு பெற்றோரைப் பற்றிய வலியுறுத்தல்கள் மிகவும் அதிகமாகவே குறிப்பிடப்பட்டுள்ளன.

பெற்றோருக்கு பணிவிடை செய்வதைப் பற்றி இஸ்லாம் அதிகமாக வலியுறுத்துவதற்கான அடிப்படைக் காரணமே அவர்கள் நம்மைப் பெற்றெடுத்ததுதான். இப்போது பிரச்சினைக்கு வருவோம், ஒரு தாய் கெட்ட நடத்தை உடையவளாக, அல்லது விபச்சாரியாக இருக்கிறாள் இப்படிப்பட்ட தாயை பிள்ளைகள் கவணிக்க வேண்டுமா? என்ற பிரச்சினை எழுகிறது.

இஸ்லாத்தைப் பொருத்தவரையில் தாயோ தந்தையோ குற்றம் செய்தவர்கள் என்பதற்காக அவர்களை கவணிக்கக் கூடாது என்று இஸ்லாம் எந்த இடத்திலும் சொல்லவில்லை. மாறாக பெற்றோர் எந்தக் குற்றத்தை செய்தாலும் அவர்களை கவணிப்பதற்கு அவர்களுக்குறிய காரியங்களை செய்வதற்கு அந்தக் குற்றங்கள் தடையாக இருக்காது.

ஏன் என்றால் ஒருவர் விபச்சாரம் செய்வதைவிட பாவமான காரியம் தான் இறைவனுக்கு இணைவைப்பது அப்படிப்பட்ட பாவத்தை செய்த பெற்றோருக்கே உபகாரம் செய்யும்படி இஸ்லாம் வலியுறுத்துகிறது.
என்னுடன் என் தாயார் அல்லாஹ்வின் தூதர் காலத்தில் வந்து இருந்தார்கள்.அப்போது அவர்கள் இணைவைப்பாளர்களாக இருந்தார்கள். நான் நபி(ஸல்)அவர்களிடம் என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரது உறவை பேணி நல்லமுறையில் நடந்து கொள்ளட்டுமா? என்று மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். "ஆம் நீ உன்தாயிடம் உறவைப்பேணி நல்ல முறையில் நடந்து கொள்" என்று கூறினார்கள்.(அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர்(ரலி), ஆதாரம்: புகாரி 2620)
மேற்கண்ட செய்தியில் இணைவைத்த தாய்க்கு உபகாரம் செய்யும்படி நபியவர்கள் கட்டளையிடுகிறார்கள். இணை வைத்தருக்கே உபகாரம் செய்ய வேண்டும் என்றால் விபச்சாரம் மற்றும் கெட்ட நடத்தையுடைய தாய்க்கு உபகாரம் செய்வதை யாரும் தடுக்க முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பல வீனத்துக்கு மேல் பல வீனப்பட்டவளாகச் சுமந்தாள்.அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். ஏனக்கும் உனது பெற்றோர்களுக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.(திருக்குர்ஆன் 31:14)
என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோர்க்கு உபகாரம் செய்யுங்கள்! என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான்.(திருக்குர்ஆன் 17:23)
உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ அல்லது இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்தால் அவ்விருவரையும் நோக்கி ‘சீ’ எனக் கூறாதே! அவ்விருவரிடமும் மறியாதையான சொல்லையே கூறுங்கள் (திருக்குர்ஆன் 17:23)
ஆக உங்கள் நண்பர் கண்டிப்பாக அவருடைய தாய்க்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்துதான் ஆகவேண்டும் என்பதே இஸ்லாத்தின் தீர்ப்பாகும்.

அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

இந்த பதிவுகளையும் பார்க்கவும் : 
பதில் : ரஸ்மின் MISc

mercredi 7 septembre 2011

மற்ற இயக்கங்களைப் பற்றிய உணர்வு வார இதழின் விமர்சனங்கள் மார்க்க அடிப்படையில் அமைந்தவைகளா?

கேள்வி : assalamu allaikkum zee rasmin neengal srilanka vai sairnthar irunthalum oru kelvi ketkeeren adu sampnthamaga markkathil tirvu enna ? qustion ; tamil nattel ulla tntj -in unarvu vara idalil matra nam samudaya iyakkathai patri kutram kurai kuri saidighal illada natghal illai (viral vittu ennum allavil sila varanghallil saidughal illai) en ivvaru varugeerathu idan thirvu enna ?

தமிழாக்கம் : அஸ்ஸலாமு அலைக்கும் ஜி ரஸ்மின் நீங்கள் ஸ்ரீலங்கா வை சேர்ந்தவராக இருந்தாலும் ஒரு கேள்வி கேட்கிறேன் அது சம்பந்தமாக மார்க்கத்தில் தீர்வு என்ன?கேள்வி : தமிழ்நாட்டில் இல்ல TNTJ வின் உணர்வு வார இதழில் மற்ற நம் சமுதாய இயக்கத்தை பற்றி குற்றம் குறை கூறி செய்திகள் இல்லாத naatka

sharfudeen abudhabi, uae

பதில் : அன்பின் சகோதரர் ஷர்புதீன் அவர்களுக்கு !

உங்கள் கேள்வி விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். தமிழ் நாட்டில் ஏகத்துவப் பிரச்சாரம் மற்றும் சமுதாயப் பணிகளில் முன்னனியில் இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தனது சேவைகள் மற்றும் செய்திகளை வெளிக்கொணரும் முகமாக உணர்வு என்ற சமுதாயப் பத்திரிக்கை ஒன்றை நடத்திவருகிறது. அப்பத்திரிக்கையில் மற்ற அமைப்புக்களை விமர்சித்து எழுதுவது சரியா என்பதுதான் உங்கள் கேள்வி.

எந்த ஒரு அமைப்பானாலும் இஸ்லாமிய அமைப்பாக தன்னை இனங்காட்டிக் கொள்ளும் போது அவ்வமைப்பு தனது செயல்பாடுகளையும் இஸ்லாமிய கொள்கைக்குற்பட்டதாகத் தான் அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் இன்று இந்தியாவில் இயங்கும் பெரும்பாலான இஸ்லாமிய அமைப்புக்களுக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை என்பதுதான் யதார்த்தமாக இருக்கிறது. இதை இந்தியாவைப் பற்றியோ அல்லது தமிழகத்தைப் பற்றியோ அறியாமல் எழுதவில்லை. கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக இந்தியாவுடன் அதிலும் குறிப்பாக தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவன் நான்.

அங்கு நான் வசித்த காலங்களில் இஸ்லாமியப் பெயர் தாங்கி இயக்கங்கள் இஸ்லாத்திற்கு மாற்றமாக எப்படியெல்லாம் நடக்கிறார்கள் என்பதையும் இதைத் தட்டிக்கேட்க யாரும் இல்லையா என்றும் நினைத்து பல முறை ஆதங்கப்பட்டதுண்டு.

ஆனால் இன்று அந்த வேலையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மிகவும் வீரியமாகவும் குர்ஆன் சுன்னாவின் அடிப்படையிலும் தெளிவாக செய்துவருகிறது.

உதாரணத்திற்கு

தமுமுக வின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் தேர்தல் பிரச்சாரத்தின் போது சுவாமியாரிடம் ஆசிர்வாதம் வாங்கியது.

காதர் மொஹிதீன் போன்றவர்கள் சாமியார்களின் கால்களில் வீழ்ந்தது.

ஜாக்கின் நிர்வாகிகள் பொன்னாடை போர்த்திக் கொண்டது.

எம்.என்.பி அல்லது பாப்புலர் பிரன்ட் (அனைத்து ஆங்கில எழுத்துக்களிலும் இவர்களுக்கு இயக்கம் இருக்கும் போலுள்ளது) போன்றவர்கள் சுதந்திர தின அணிவகுப்பு என்ற பெயரில் கொடி வணக்கம் செய்வது.

கடந்த தேர்தலில் ஜெயித்த ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இயேசுநாதரின் புனிதம் பற்றிப் பாடப்பட்ட சி.டி வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டமை.

கடந்த சில வருடங்களுக்கு முன் தவ்ஹீத் ஜமாத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பாக்கர் உள்ளிட்டவர்கள் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டமை.

இலங்கை முஸ்லீம்களை அழித்து முஸ்லீம் சமுதாயத்தை நடுத்தெருவில் நிறுத்திய விடுதலைப் புலி தீவிரவாதிகளுக்கு ஆதரவாக தமுமுக, பாக்கர் பாப்புலர் பிரன்ட் போன்ற அமைப்புக்கள் செயல்படுகின்றமை. (இது தொடர்பாக நான் உணர்வு பத்திரிக்ககையில் எழுதிய ஆக்கத்தைப் பார்க்க இங்கு க்லிக் செய்யுங்கள் )

இப்படி தமிழகத்தை சேர்ந்த பல அமைப்புக்கள் தங்கள் சுய நலத்திற்காக இஸ்லாத்தை தூக்கியெறிந்துவிட்டதை நாம் கண்முன்னால் கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.

ஒருவர் அல்லது ஒரு அமைப்பு முன்வைக்கும் கருத்து அல்லது கொள்கை தவறானது என்று உறுதியாகத் தெரிந்தால்,அதை மக்கள் சரிகண்டு அதன் வழியில் சென்று வழிகேட்டில் வீழ்ந்து விடாமல் அவர்களை தடுப்பதாக இருந்தால், அக்கொள்கையின் விபரீதத்தை மக்களுக்கு விளங்கப் படுத்தும் விதமாய் விமர்சிப்பதைத் தவிர வேறு என்ன வழி தான் இருக்க முடியும்?

இதைக்கூட நாமாகக் கற்பனை செய்து கூற வில்லை. திருக்குர்ஆனும் நபி மொழிகளும் மக்களை ஏமாற்ற முனையும் பேர்வழிகளை விமர்சிப்பதன் மூலம் அவர்களின் முகத்திரையை கிழிக்குமாறு எம்மை பணிக்கின்றது.

இதற்கான சான்றுகள் இதோ :

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தங்களைச் சேர்ந்த ஓர் ஆணும் பெண்ணும் விபச்சாரம் செய்து விட்டதாகக் கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘கல்லெறிந்து கொல்லுதல் பற்றி தவ்ராதில் கூறப்பட்டுள்ளது என்ன?’ என்று திருப்பிக் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் ‘அவர்களுக்கு கசையடி கொடுத்து இழிவு படுத்துவோம்’ என்று விடையளித்தனர். அப்போது, அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்கள் யூதர்களை நோக்கி ‘நீங்கள் பொய்யுரைக்கின்றீர்கள். தவ்ராதில் கல்லெறிந்து கொல்லுதல் பற்றிக் கூறப்பட்டுள்ளது’ என்றார். உடனே அவர்கள் தவ்ராதை எடுத்து வந்தனர். அவர்களில் ஒருவர் கல்லெறிந்து கொல்வது சம்பந்தமான வசனத்தைக் கையால் மறைத்துக் கொண்டு, அதற்கு முன் பின் வசனங்களை படித்தார். ‘கையை எடுப்பீராக!’ என்று அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்கள் கூறியதும் அங்கே அந்த வசனம் காணப்பட்டது என்ற செய்தி புகாரி முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

அவர்கள் புண்படுவார்களே என்று எண்ணி அவர்களின் தவறை சுட்டிக்காட்ட நபித்தோழர் தயங்க வில்லை. நபியவர்களும் அதை அங்கீகரித்தார்கள்.‘தங்கள் கைகளால் புத்தகத்தை எழுதிக் கொண்டு, இது அல்லாஹ்விடமிருந்து வந்தது எனக் கூறியோருக்குக் கேடு உண்டாகட்டும்’ (2:79) என்று இறைவன் கூறுகிறான். அவர்கள் வேதத்தில் சுயமாகச் சேர்த்துக் கொண்டவைகளை இங்கே இறைவன் விமர்சனம் செய்கிறான்.

இன்ஜீல் என்பது ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டு, அவர்கள் மக்களுக்குப் போதித்ததாகும் (5:110). ஈஸா (அலை) அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களால் எழுதப்பட்டவற்றை இன்ஜீல் என்று கூறி, மக்களை ஏமாற்றும் போக்கை விமர்சனம் செய்வது தவறு என்று யாராவது கூறுவார்களா?

ஒட்டகம் உண்பதைத் தங்களுக்கு இறைவன் ஹராமாக்கியதாக யூதர்கள் பொய் கூறிய போது, தவ்ராத்தைக் கொண்டு வந்து, அதை நிரூபியுங்கள் (3:93) என்று நபியவர்களை சவால் விடச் செய்தது பிழையா?

வேதத்திற்கு தவறான விளக்கம் கூறி ஏமாற்றி வந்ததையும் இறைவன் கண்டிக்கத்தவறவில்லை (3:78).

நபியவர்கள் பற்றிய முன்னறிவிப்பைத் திட்டமிட்டு அவர்கள் மறைத்து வந்ததையும் இறைவன் அடையாளம் காட்டாமல் விடவில்லை (2:146).

வேதத்தில் நீங்கள் மறைத்து வைத்த அனேக வசனங்களை அம்பலப்படுத்தவே நமது தூதர் உங்களிடம் வந்துள்ளார் (5:15) என்று கூறி, அவர்களை விமர்சனம் செய்யும் நோக்கத்திற்காகவே நபி (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டதாக இறைவன் பிரகடனம் செய்கின்றான். இப்றாஹீம் (அலை) அவர்கள், யூத மார்க்கத்தவராக இருந்தார்கள் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த போது, இப்றாஹீம் காலத்தில் தவ்றாத் அருளப்படவில்லையே! அவருக்குப் பின்னர்தானே தவ்ராத் அருளப்பட்டது (3:67) என்று மறுப்புக் கூறி, அவர்களை இறைவன் வாயடைக்கச் செய்தான்.

மேற்குறிப்பிட்ட ஆதாரங்கள் அனைத்தும் ஒருவர் தவறு விடும் போது அல்லது சத்தியத்தை மறைக்கும் போது அதனை வன்மையாக விமர்சிக்க வேண்டும் என்பதற்கான சான்றுகளாகும்.

பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பது தவறா?

ஒரு தவறை சுட்டிக் காட்டும் போது, தவறிழைத்தவனுக்கு தான் செய்வது தவறு தான் என்று விளங்கும் விதத்திலும், இது எனக்குத் தான் சொல்லப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளும் வகையிலும், உள்ளத்தை உழுக்கும் விதத்திலும் மழுப்பலோ, மறைத்தலோ, சுற்றி வளைப்போ இன்றி சொல்வதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். இது எப்போது சாத்தியம்?
இயக்கத்தின் பெயரைக் குறிப்பிட்டு தவரை சுட்டிக் காட்டி விமர்சிக்கும் போதுதான் இது சாத்தியமாகும். இதையும் கூட நாமாகக் கூற வில்லை. யூத கிறிஸ்தவர்கள் (2:120), இஸ்ரவேலர்கள் (2:79), மஜூஸிகள் (22:17),முனாபிக்குகள் (2:8, 4:108), தவறிழைக்கும் ஒவ்வொரு கணமும் அல்லாஹ்வால் சுட்டிக்காட்டப்பட்டு விமர்சிக்கப்பட்டார்கள்.

தவறுகளை விமர்சிக்கும் போது அதைச் சொன்னவரையும் அதைப்பின்பற்றும் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் பெயர் குறிப்பிட்டுத் தான் விமர்சிக்க வேண்டும். இதுவும் அல் குர்ஆனின் வழி முறை தான். ஆது கூட்டம் (7:71), ஸமூது கூட்டம் (27:47), யானைப்படை (105:1), யஃஜூஜ் மஃஜூஜ் (18:94), அபூ லஹப் (111:1-3), இரம் (89:7), காரூன் (28:76), ஆஸர் (6:74), ஃபிர்அவ்ன் (2:49), சாமிரி (20:85),ஜாலூத் (2:249) ஆகியோர் அல்லாஹ்வால் விமர்சிக்கப்பட்டதும் இந்த அடிப்படையில் தான்.

இது போல், இன்னும் அனேக இடங்களில் வேதமுடையவர்களையும் பல தெய்வக் கொள்கையுடையோரையும் அல்லாஹ் விமர்சனம் செய்துள்ளான். ‘வேத முடையோரே!’ என்று பல இடங்களில் அவர்களை அழைத்து, அவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டியும் உள்ளான். பெயர் குறிப்பிட்டு விமர்சிப்பது தவறுதான் என்றால் ஹதீஸ் கலையில் அறிவிப்பாளர்களின் குறைகளை அக்குவேர் ஆணிவேராக விமர்சிக்கும் ‘இல்முல் ஜரஹ் வத்தஃதீல்’ எனும் கலையை இவர்கள் பண்பாடற்ற கலை என்று கூறத்துணிவார்களா?

ஸகாத் வசூலிப்பதற்காக அனுப்பப்பட்ட நபித்தோழர் ஸகாத் பணத்துடன் இணைத்து வழங்கப்பட்ட அன்பளிப்பை ‘இது எனக்கு அன்பளிப்பாகத் தரப்பட்டது’ என்று கூறியதைக் கேட்ட நபிகளார், முகம் சிவந்தவராய் மிம்பரில் ஏறி, அனைத்து தோழர்களையும் ஒன்று கூட்டி ‘இவர் தனது தாயின் வீட்டில் இருந்திருந்தால் இது இவருக்குக் கிடைத்திருக்குமா?’ என்று கடிந்து கொண்டு அனைவர் முன்னிலையிலும் ஒரு நபித்தோழரை நபிகளார் விமர்சித்ததையும் பண்பாடற்ற விமர்சனம் என்று குறை காணப்போகிறார்களா?

காரமாகவும் கடுமையாகவும் விமர்சிப்பது அல் குர்ஆனுக்கு முரணா? நாம் எமது பேச்சுகளிலும், எழுத்துகளிலும் தவறிழைப்பவரை விமர்சிப்பதில் உள்ள கடுமையை விட, காரத்தை விட அல்லாஹ் தவறிழைப்பவர்களை விமர்சிப்பதற்காக பிரயோகிக்கும் வார்த்தைப் பிரயோகம் மிகுந்த கடுமையும் காரமும் மிக்கதாக உள்ளது.

அல் குர்ஆனின் வசனங்களை ஏற்க மறுப்பவனை, அதன் போதனைகளை மறுப்பவனை விமர்சிக்கும் போது “அவனுக்குறிய உதாரணம் நாய். அதை நீ தாக்கினாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது. அதை விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விட்டுக் கொள்கிறது.” (7:176) ‘நாய்’ என்று விமர்சிக்கிறான்.

இஸ்லாத்தை கற்பதற்கு முன்வராத அறிவிலிகளை விமர்சிக்கும் போது “அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால் நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள்.” (7:179)

‘கால் நடைகள்’ என்கிறான்.வேதத்தைக் கற்று அதன் படி ஒழுகாதவர்களை விமர்சிக்கும் போது“தவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச் சுமக்காமல் (அதன் படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது.” (62:5) ‘கழுதை’ என்று பொறிந்து தள்ளுகிறான்

.அல் குர்ஆனும், சுன்னாவும் ஒன்றை சொல்லும் போது அதனை புறக்கணித்து, அதற்கு மாற்றமாக நடப்பவர்களை விமர்சிக்கும் போது “அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்.” (74:50-51) ‘கழுதை’ என்று காட்டமாக விமர்சிப்பதைப் பார்க்கிறோம். உணர்வு பத்திரிக்கையின் விமர்சனம் தவறு என்றால், வார்த்தை கடுமையானது என்றால், இவ்வாறு விமர்சிப்பது பண்பாடற்ற வழிமுறை என்றால், இவர்கள் முதலில் இவ்விமர்சனத்தைச் செய்த அல்லாஹ்வையும், அதனை அப்படியே ஏற்று, அவ்விமர்சன வார்த்தைகளை அந்தத் தவறுகளை செய்த மக்களின் முகத்துக்கு முன் அப்படியே ஓதிக்காட்டிய நபிகள் நாயகத்தையும் நோக்கித் தான் தங்கள் சுட்டு விரலை முதலில் நீட்ட வேண்டும்.

உங்கள் வாதப்படி அல்லாஹ் ‘நாய்’ என்றும், ‘கழுதை’ என்றும்,‘மிருகம்’ என்றும் நாகரீகம் இல்லாமல்: பண்பாடு தெரியாமல்: நளினம் தெரியாமல் விமர்சித்திருக்கிறான் என்று கூறவேண்டி வரும். ஒருவர் குர்ஆன், சுன்னாவிற்கு எதிராக நடக்கும் போது அவரை நாம் விமர்சித்தால், அதனால் அவர்கள் ‘புண்படுவார்கள்’ என்பதெல்லாம் அறிவுடையோர் கூறும் பதிலாக முடியாது.

எதைப் பிரச்சாரம் செய்தாலும் பாதிக்கப்படுவோர் புண்படவே செய்வார்கள். இவர்கள் சொல்வதை ஏற்றால் மத்ஹபுகளை, கல்லறை வணக்கத்தை, தரீக்காக்களை, பித்அத்துவாதிகளை மற்றும் எதையுமே விமர்சிக்க முடியாமல் போய்விடும். அத்தோடு, அல்லாஹ்வும் அவன் தூதரும் நளினம் தெரியாமல், மென்மை புரியாமல் அநாகரிகமாக விமர்சித்து விட்டார்கள் என்ற தப்பான கருத்தும் வந்து விடும். நஊது பில்லாஹ்.

ஆக அன்பின் சகோதரரே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் உணர்வுப் பத்திரிக்கை மற்ற அமைப்புக்களைப் பற்றி விமர்சிக்கும் போது பொய்யான தகவல்களை வெளியிட்டால் அதனை சுட்டிக்காட்டலாம், தட்டிக் கேட்க்களாம் ஆனால் இறைவனின் அருளால் உணர்வு செய்யும் சேவையினால் தமிழகத்தின் பல இயக்கங்களின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதை நினைத்து நாம் சந்தோஷப் பட்டு இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

பதில் : ரஸ்மின் MISc

mardi 6 septembre 2011

தக்பீருக்கு முன் இன்னி வஜ்ஹது ஓத வேண்டுமா?

கேள்வி : tholuvatharkumun inni vajhathu oda venduma athavathu thakbeer koori kaiyai kattuvatharku munnal inni vajhathu vajiya nillazi fathirassamavathi valarza anifanv vama ana minal mushrikeen itharku translationum kooravum. 

தமிழாக்கம் : தொழுவதற்கு முன் இன்னி வஜ்ஹது ஓத வேண்டுமா அதாவது தக்பீர் கூறி கையால் கட்டுவதற்கு முன்னால் இன்னி வஜ்ஹது வஜிய நில்லாஜி பாதிர் ரஸ்ஸமாவாதி வளர்ஜா அணிபன் வமா அனா மினல் முஷ்கிரீன் இதற்க்கு ட்ரான்ஸ்லேசனும் கூறவும்.

 Zakiyya . india 

பதில் : தொழுகையில் தக்பீருக்கு முன் ஓதுவதற்கு எந்தவிதமான துஆக்களையும் நபியவர்கள் நமக்குக் காட்டித் தரவில்லை. நீங்கள் சொல்லும் துஆ தக்பீர் கட்டியவுடன் ஓதுவதற்கு உரியதாகும். 

நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போது தக்பீர் கூறுவார்கள். பிறகு பின்வரும் துஆவை ஓதி விட்டு கிராஅத் ஓதுவார்கள். 
 வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ ஃபதரஸ் ஸமாவா(த்)தி வல்அர்ள ஹனீஃபன் வமா அன மினல் முஷ்ரி(க்)கீன். இன்ன ஸலா(த்)தீ வநுசு(க்)கீ வமஹ்யாய வமமா(த்)தீ லில்லாஹி ரப்பில் ஆலமீன். லாஷரீ(க்)கலஹு வபிதாலி(க்)க உமிர்(த்)து வஅன மினல் முஸ்லிமீன். அல்லாஹும்ம அன்(த்)தல் மலி(க்)கு லாயிலாஹ இல்லா அன்(த்)த, வஅன அப்து(க்)க ளலம்(த்)து நஃப்ஸீ, வஃதரஃப்(த்)து பிதன்பீ ஃபஃக்பிர்லீ துனூபி ஜமீஆ, லாயஃக்ஃபிருத் துனூப இல்லா அன்(த்)த வஹ்தினீ லி அஹ்ஸனில் அக்லா(க்)கி லா யஹ்தீ லிஅஹ்ஸனிஹா இல்லா அன்(த்)த, வஸ்ரிஃப் அன்னீ ஸய்யிஅஹா,லாயஸ்ரிஃபு அன்னீ ஸய்யிஅஹா இல்லா அன்(த்)த, லப்பை(க்)க வஸஃதை(க்)க வல்கைரு குல்லுஹு ஃபீயதை(க்)க வஷ்ஷர்ரு லைஸ இலை(க்)க அன பி(க்)க வஇலை(க்)க தபாரக்(த்)த வ(த்)தஆலை(த்)த அஸ்தஃபிரு(க்)க, வஅ(த்)தூபு இலை(க்)க  

பொருள்: இணை வைத்தவர்களில் ஒருவனாக நான் இல்லாமல் கட்டுப்பட்டவனாக, வானங்களையும் பூமியையும் படைத்தவனை நோக்கி என் முகத்தைத் திருப்புகிறேன். என் தொழுகையும், என் இதர வணக்கங்களும், என் வாழ்வும்,என் மரணமும் அகில உலகையும் படைத்து இரட்சிக்கும் இறைவனுக்கே உரியன. அவனுக்கு நிகராக எவருமில்லை. இவ்வாறு தான் ஏவப்பட்டுள்ளேன். கட்டுப்பட்டு நடப்பவர்களில் நானும் ஒருவன். இறைவனே! நீயே அதிபதி. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவருமில்லை. நான் உனது அடிமை. எனக்கே நான் அநீதி இழைத்து விட்டேன். என் குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டேன். எனவே என் குற்றங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! உன்னைத் தவிர வேறு யாரும் குற்றங்களை மன்னிக்க முடியாது. நற்குணத்தின் பால் எனக்கு வழி காட்டுவாயாக! உன்னைத் தவிர யாரும் வழி காட்ட முடியாது. தீய குணங்களை விட்டும் என்னைக் காப்பாயாக! உன்னைத் தவிர யாரும் தீய குணங்களை விட்டும் காக்க முடியாது. இதோ உன்னிடம் வந்து விட்டேன். அனைத்து நன்மைகளும் உன் கைகளிலே உள்ளன. தீமைகள் உன்னைச் சேராது. நான் உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே சரணடைந்தேன். நீ பாக்கியம் மிக்கவன். உயர்ந்தவன். உன்னிடம் பாவமன்னிப்பு தேடுகின்றேன். உன்னை நோக்கி மீள்கின்றேன். அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: நஸயீ 887 
இந்த ஹதீஸ் முஸ்லிம் 1290 லும் இடம் பெற்றுள்ளது. 

இதுவல்லாத இன்னுமொரு துஆவையும் நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். 
'அல்லாஹும்ம பாயித் பைனீ வ பைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரி(க்)கி வல் மக்ரிப். அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யலு மினத் தனஸ். அல்லாஹும் மக்ஸில் கதாயாய பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத்  

பொருள்: இறைவா! கிழக்குக்கும், மேற்குக்கும் இடையே வெகு தூரத்தை நீ ஏற்படுத்தியதைப் போல் எனக்கும், என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போல் என்னை என் தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக! இறைவா! தண்ணீராலும்,பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவி விடுவாயாக! அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ 744 
இந்த இரண்டு துஆக்களும் தான் தொழுகையில் தக்பீர் கட்டியவுடன் ஓதுவதற்கு நபிவழியில் காட்டித்தரப்பட்டுள்ள துஆவாகும். 

அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

பதில் : ரஸ்மின் MISc