புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

vendredi 11 mars 2011

பிரான்சில் ஏப்ரல் 11 முதல் பெண்கள் முகத்தை மறைக்கக் கூடாது என்கிற சட்டம் அமலுக்கு வருகிறது

முகத்தை மறைக்கும் வகையில் முகத்திரை அணிவதற்கு தடை விதிக்கும் ஃப்ரான்ஸ் அரசின் சட்டம் எதிர்வரும் ஏப்ரல் 11 முதல் நடைமுறைக்கு வருகிறது. குறிப்பாக, இஸ்லாமியப் பெண்கள் மரபு காரணமாக அவ்வாறு அணிந்து வருவார்களானால், அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு வரும்படி கோரப்பட்டு, முகத்திரை நீக்கக் கோரப்படுவார்கள் அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று அந்தச் சட்டம் உள்ளதாம்.


"இது ஒரு குறியீடான சட்டம் தான், அதற்காக எல்லா முஸ்லிம் பெண்களையும் துன்புறுத்துவதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று ஃப்ரேஞ்ச் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

"தேவையற்ற குழப்பத்தைத்தான் இது ஏற்படுத்தும்" என்று பாரிஸ் நகர இமாம் மூஸா நியாம்பில் கருத்துத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இச்சட்ட மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இது முஸ்லிம் பெண்களின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று கண்டனங்கள் எழுந்தது நினைவிருக்கலாம்.

முகத்தை மறைக்கும் எந்த ஆடை வகையையும், பொது இடங்களில், குறிப்பாக, வீதிகள், பொது போக்குவரத்து வாகனங்கள், கடைகள், பள்ளிகள், பொது அவைகள், அரச அலுவலகங்கள், மருத்துவமனைகளில் அணியக்கூடாது என்று இந்தச் சட்டம் சொல்கிறது. மீறுவோர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு திரை நீக்கி தங்கள் அடையாளத்தை பதிவு செய்யப் பணிக்கப்படுவார்களாம். மறுத்தால் இருநூற்று எட்டு அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்படும்.

நன்றி  : kahatoweta.blogspot.com