புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

samedi 12 février 2011

பெண்கள் முகத்தை மறைப்பதால் நன்மையா தீமையா ?


Name(பெயர்)  : சபீனா இன்சாஃப், France
Title(தலைப்பு)  : பெண்கள் முகத்தை மறைப்பதால் நன்மையா தீமையா ?

சென்ற (ஹிஜாப் சட்டம்) என்ற கட்டுரையில் குர்ஆன் ,ஹதீஸின் படி ஹிஜாப் சட்டத்தை சுருக்கமாக பார்த்தோம் நடை முறையில் முகத்தை மறைப்பதால் ஏற்படும் பாதகமான விளைவையும் பார்ப்போம் !

பொது இடங்களில் உதாரனமாக Bank,Airport,Busstop,Railway station போன்ற பொது இடங்களில் கண்காணிப்பு camera வில் முகம் பதியப்படுகிறது ,ஆனால் பர்தா அணிந்து முகத்தை மறைப்பதால் கண்காணிப்பதில் சிரமம் ஏற்ப்படுகிறது ஆகையால் தான் France போன்ற நாடுகளில் முகத்தை மறைத்து பர்தா அணிய தடை செய்ய பட்டுள்ளது .

பர்தா அணியவைத்து பெண்களை சிறை வைக்கிறோம் என்று மாற்றுமதத்தவர்கள் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள் ஆனால் ஹிஜாப் சில தவறான ஆண்களின் பார்வையிலிருந்து அவர்களுக்கு சுகந்திரத்தையும் பாதுகாப்பையும் கொடுக்கிறது என்பதையும் கண்கூடாக காணலாம் !

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். (அல் குர்ஆன் 33 :59 )